ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
திருமணி மாலை பாடல் காப்பு
இந்த திருமணி மாலை பாடல்களை "எப்போதும்வென்றான்" என்னும் திருத்தலத்தில் தெய்வமாய் குடியிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திரு சோலையப்பசுவாமிகள் இயற்றி அருளியது.
-காப்பு-
கருமணி உண்டு சொற்காயாம்பு மேனிக் கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவிகோடி சூரியப்ரகாச குரவி உண்டு
திருமணி உண்டு ஹரி ஓம்நமோ ராமானுஜாய என்ற தெய்வமுண்டே...
நேர்த்திகடன்,
நோயுற்ற பக்தர்கள் ஆத்திசாமியிடம் தாங்கள் குணமடைய வேண்டி நேர்ந்து கொண்டு, பின் குணமடைந்த பிறகு காணிக்கையாக காலணிகளை சாமிக்கு செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு சிறு பகுதி..
வழிபாட்டு முறை
'' கருமணி உண்டு சொற்காயம்பு மேனி கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்திலே உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியப்ரகாச குரவி உண்டு
திருமணி உண்டு ஹரி ஓம் நமோ ராமானுஜாய என்ற தெய்வம் உண்டு''
கேள்வி :நமது கோவிலில் பெரியசாமியாக சங்கு சக்கரத்துடன் கூடிய திருமேனி கொண்ட பெருமாளை வழிபட்டு வருகிறோம் ஆனால் திருமணி மாலையில் ''சிவகடாட்சம்'' என்று வ்ருகிறதே..!! அப்படியானால் நமது கோவில் சைவ வழிபாட்டு கோவிலா ??
பதில்:: நமது குலதெய்வம் ஐந்துவீட்டு சுவாமிகளின் வழிபாட்டு முறையினை ஆராய்ச்சி செய்தோமானால் ''சித்தர்''களின் வழிபாட்டு முறை போல் குரு சிஷ்ய பரம்பரை கொண்ட கோவிலாக உள்ளது. கோவிலில் தெய்வங்களுக்கு உருவமில்லை, (பெரியசாமிக்கு சுமார் 1955 ம் ஆண்டு வாக்கில்தான் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது) ஆகம விதிகள் எதுக்கும் கட்டுபடாத புரட்சிகரமான கருத்துகளை வழிபாட்டு முறைகளாக கடைப்பிடிக்கும் கோவிலாக இருந்து வருகிறது. வைணவ கோவில் ஆனால் வைணவ வழிபாட்டு முறை கிடையாது, சரி சைவ வழிபாடு இருக்கான்னா..? அதுவும் இல்லை, இரண்டு வழிபாட்டு முறைகளுக்குள்ளும் முறைபடுத்த இயலாத வழிபாட்டு முறையை கொண்டுள்ளது, இங்கு பணிவிடை பூஜைகளின் போது பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது, பொதுவாக பெண்கள் மாதவிலக்கின் போது கோவிலுக்குள் செல்ல கூடாது என்பது ஐதீகம் ஆனால் நமது கோவிலில் எந்த விலக்கும் இல்லை, கருவறை செல்லலாம், அதே போல் கர்பமான காலங்களிலும் பெரும்பாலான கோவில்களுக்கு பெண்கள் செல்வதில்லை ஆனால் நமது கோவிலில் கர்பமான பெண்களுக்கு இரண்டு பிரசாதம் அதாவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து வழங்கப்படுகிறது, எல்லா கோவில்களிலும் பூசாரி தட்டில் பணம் வாங்குவார்கள் ஆனால் இங்கு அண்ணாவி (பூசாரி) எந்தவிதமான அன்பளிப்புகளையும் வாங்குவதில்லை, பக்தர்கள் அனைவரும் ஒரே விதமாகவே நடத்தப்படுகிறார்கள், பெரியசாமி அவதாரத்தை நிறைவு செய்யும் போது ''பஞ்சபூதங்களுடன் கலந்துவிட்டார்'' சித்தர்கள் இறப்பதில்லை சமாதியாவார்கள், வள்ளலார் கூட பஞ்சபூதங்களுடன் கலந்ததாக வரலாறு, இன்னும் சற்று உன்னிப்பாக கவனித்தோமானால் முகமது நபி , புத்தர் போன்றோர்கள் வழிபாட்டு முறைகள் கூட இதை அனுசரித்தே இருக்கிறது. அதனால் நமது கோவில் வழிபாடு சித்தர்கள் கோவிலாக ஆதி காலத்தில் இருந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது, ''கருமணி'' என்பதற்க்கு மூலாதாரம் என்றும் பொருளுண்டு அதேபோல் '' சிவகடாச்சம்'' என்பதற்க்கும், திருமணி மாலையில் உள்ள அத்தனை பாடல் வரிகளுக்கும் பல அர்த்தங்கள் உள்ளடங்கியே உள்ளன, அதை முழுவதும் புரிந்தவர்கள் அதற்க்கு விளக்கம் தந்தால் இன்னும் முழுமையாக இருக்கும், பூஜையின் போது நடைமுறைகள் சித்தர்கள் உபதேசம் செய்யும் விததிலேயே இருக்கிறது.
குலதெய்வம்
குலதெய்வம் என்றாலே ஒரு சாதியினர் மட்டுமோ அல்லது ஒரு வகையினர் மட்டுமோ வணங்கி வருவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் முன் காலத்திலேயே நமது குலதெய்வம் பெரியசாமி ஆன்மீகத்தில் பிராமணர்களின் அடக்கு முறையை எதிர்த்து மற்றவர்களுக்கு சுயமரியாதையை ஏற்ப்படுத்தியவர்🤔 அதனால்தான் நமது கோவிலில் சாதி பாகுபாடு இல்லாமல் ''அனைத்து சாதியினரும் குலதெய்வமாக'' வழிபட்டு வருகிறோம். நமது குலதெய்வம் நல்ல சமுதாயத்தின் முன்னோடியான வாழ்க்கை முறை வழிகாட்டி...
குதிரைசாமி
குதிரைசாமி, தீயவற்றை உடனடியாக அழித்து நம்மை காக்கும் துடியான தெய்வமான ஆத்திசாமியின் வாகனம். இவரிடம் வேண்டுதல் வைத்தால் நம் கோரிக்கை உடனடியாக நிறைவேற உதவி புரிகிறார்..
மக்கள் சேவையில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி
எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது பற்றிய பதிவு இது.
உடன்குடியில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் உடன்பிறப்பாக
வாழ்ந்து வந்ததாலும் கிறிஸ்டியா நகரம் பகுதியில் அமைந்துள்ள
TDTA மற்றும் அன் பெசன்ட் (CSI Christian) மேல்நிலைப் பள்ளியில்
கடந்த பல வருடங்களுக்கு முன் அப்பள்ளியில் பயின்ற மாணவிகள்
தங்களது கோவில் கொடை முடிந்து முளைப்பாரியை பூவாக
தலையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனால்
கடும் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை
கடுமையாக திட்டி முளைப்பாரி பூவை தலையிலிருந்து பிய்த்து
எறிந்து தாக்கியுள்ளனர். இதனால் கண்ணீருடன் வீட்டுக்கு திரும்பிய
மாணவிகள் தங்களது பெற்றொர்களிடம் நிலைமையை
கூறியுள்ளனர்.இதைப்போலவே மாணவர்கள் குலசை
ஸ்ரீமுத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு விரதமிருந்த பள்ளி
மாணவர்களையும் கடுமையாக விமர்சித்து அசிங்க படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து இப்படியே பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதால்
பெற்றோர்கள் அனைவரும் இணைந்து, இந்து அமைப்புகள்
மூலம் பள்ளியை முற்றுகையிட்டு கண்டித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகமோ இது கிறிஸ்தவ பள்ளி இங்கே பூ, பொட்டு
என இந்து அடையாளத்துடன் வரக்கூடாது என்றும் மீறி வந்தால்
இப்படி தான் செய்வோம் என கூறியதோடு நீங்கள் ஏன் இங்கே படிக்க
வைக்கிறீர்கள் எனவும் உங்களுக்கு முடிந்தால் நீங்களே ஒரு
பள்ளியைக் கட்டி படிக்க வைக்க வேண்டியது தானே என ஏளனம்
செய்துள்ளனர். இதனால் அவமானப்பட்ட இந்துக்கள் ஒன்று கூடி
கிறிஸ்தவ பள்ளிக்கு ஒரு முடிவு கட்ட ஒற்றுமையுடன் ஓரணியில்
நின்று ஒரு இந்துப் பள்ளியை கட்ட சபதமெடுத்தனர். டாக்டர்
சிவதாணு மற்றும் நடராஜ நாடார் போன்றவர்களின் தீவிர
முயற்சியினால் பள்ளிக்கென்று "செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி"
கோவிலின் 10 ஏக்கர் நிலத்தை (தேரியூர்) தானமாக பெற்றனர். இந்து
அமைப்புகளின் அதிதீவிர முயற்சியால் ராமகிருஷ்ண பள்ளி
திருபோவன நிர்வாகத்துடன் கைகோர்த்து இந்துக்களுக்கான முதல்
பள்ளி 1986 ம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியாக
உருவானது.இந்துக்களுக்கான இந்த ஸ்ரீராமகிருஷ்ண
சிதம்பரேஸ்வரர் பள்ளி திறக்கப்பட்ட அன்றே 1350 மாணவ
மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் அப்பகுதி இந்துக்கள். இன்றைய
காலகட்டத்தில் இந்த பள்ளி தான் முதன்மை பள்ளியாக
சிறந்து விளங்குகிறது.
எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது பற்றிய பதிவு இது.
உடன்குடியில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் உடன்பிறப்பாக
வாழ்ந்து வந்ததாலும் கிறிஸ்டியா நகரம் பகுதியில் அமைந்துள்ள
TDTA மற்றும் அன் பெசன்ட் (CSI Christian) மேல்நிலைப் பள்ளியில்
கடந்த பல வருடங்களுக்கு முன் அப்பள்ளியில் பயின்ற மாணவிகள்
தங்களது கோவில் கொடை முடிந்து முளைப்பாரியை பூவாக
தலையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனால்
கடும் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை
கடுமையாக திட்டி முளைப்பாரி பூவை தலையிலிருந்து பிய்த்து
எறிந்து தாக்கியுள்ளனர். இதனால் கண்ணீருடன் வீட்டுக்கு திரும்பிய
மாணவிகள் தங்களது பெற்றொர்களிடம் நிலைமையை
கூறியுள்ளனர்.இதைப்போலவே மாணவர்கள் குலசை
ஸ்ரீமுத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு விரதமிருந்த பள்ளி
மாணவர்களையும் கடுமையாக விமர்சித்து அசிங்க படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து இப்படியே பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதால்
பெற்றோர்கள் அனைவரும் இணைந்து, இந்து அமைப்புகள்
மூலம் பள்ளியை முற்றுகையிட்டு கண்டித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகமோ இது கிறிஸ்தவ பள்ளி இங்கே பூ, பொட்டு
என இந்து அடையாளத்துடன் வரக்கூடாது என்றும் மீறி வந்தால்
இப்படி தான் செய்வோம் என கூறியதோடு நீங்கள் ஏன் இங்கே படிக்க
வைக்கிறீர்கள் எனவும் உங்களுக்கு முடிந்தால் நீங்களே ஒரு
பள்ளியைக் கட்டி படிக்க வைக்க வேண்டியது தானே என ஏளனம்
செய்துள்ளனர். இதனால் அவமானப்பட்ட இந்துக்கள் ஒன்று கூடி
கிறிஸ்தவ பள்ளிக்கு ஒரு முடிவு கட்ட ஒற்றுமையுடன் ஓரணியில்
நின்று ஒரு இந்துப் பள்ளியை கட்ட சபதமெடுத்தனர். டாக்டர்
சிவதாணு மற்றும் நடராஜ நாடார் போன்றவர்களின் தீவிர
முயற்சியினால் பள்ளிக்கென்று "செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி"
கோவிலின் 10 ஏக்கர் நிலத்தை (தேரியூர்) தானமாக பெற்றனர். இந்து
அமைப்புகளின் அதிதீவிர முயற்சியால் ராமகிருஷ்ண பள்ளி
திருபோவன நிர்வாகத்துடன் கைகோர்த்து இந்துக்களுக்கான முதல்
பள்ளி 1986 ம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியாக
உருவானது.இந்துக்களுக்கான இந்த ஸ்ரீராமகிருஷ்ண
சிதம்பரேஸ்வரர் பள்ளி திறக்கப்பட்ட அன்றே 1350 மாணவ
மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் அப்பகுதி இந்துக்கள். இன்றைய
காலகட்டத்தில் இந்த பள்ளி தான் முதன்மை பள்ளியாக
சிறந்து விளங்குகிறது.
விழாக்கால நடைமுறை 2017
29-04-2017 சனிகிழமை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை 01-05-2017 திங்கள் கிழமை ஆகிய மூன்று நாட்கள் பணிவிடைகள் அனுமதியில்லை. 01-05-2017 திங்கள் கிழமை மட்டும் மேக்கட்டி பூஜை அன்று பணிவிடைகள், காதுகுத்து, முடி காணிக்கை செலுத்த அனுமதியில்லை. 06-05-2017 சனிக்கிழமை அன்னமுத்திரி பூஜை அன்று பணிவிடைகள் மாலை 5 மணிக்கு மேல் தான் அனுமதிக்கப்படும்.
பெரியசுவாமி
தை முதல் தேதி
நமது கோவிலில் தை மாதம் முதல் தேதியன்று மொட்டை போடலாம் ஆனால் பணிவிடை செய்ய அனுமதியில்லை. மறுநாள் மொட்டை போடலாம், பணிவிடையும் செய்யலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)