திருகார்த்திகை திருவிழா

                                           ''திருகார்த்திகை திருவிழா''
             இக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருகார்த்திகை உற்சவம் மிகவும் சிறப்பானது, உற்சவ நாளன்று காலை செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த ஆண்களால், கோயிலுக்கு சொந்தமான வாடல்பனை ஒன்றை வெட்டியெடுத்து முழு மரத்தையும் தலை சுமையாக சுமந்து ஆலயத்திற்கு கொண்டுவந்து நிறுத்தி பனை ஓலைகளால் சொக்கப்பனை கட்டப்படுகிறது, பின்பு தீ இட்டு சொக்கபனை கொளுத்தப்படுகிறது, சொக்கப்பனை எரிநத பின்பு அதிலுள்ள ஆத்தி மர குச்சிகளை பக்தர்கள் எடுத்து தங்கள் வீட்டு கூரையின் மீது போட்டு பலன் அடைகிறார்கள் 

கோவில் வரலாறு TEMPLE HISTORY

               ஜாதி பேதமில்லாத கோவில்
  பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு உள்ளது. நாயக்கர்கள் படையெடுப்பின்போது, ஆலயத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.

                  ''அன்னதானம்'' வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை''  எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவும்,ஆடு,மாடு,வளர்த்த குலசகரபட்டினம் கோனார்கள் ''இடைப்பாட்டம்''எனவும்,தென்னை பனை மர  பரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை''  எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் "விற்பிடி" எனவுங்கள் வைங்த்திருப்போர்கள் "மரவிறை'' எனபரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ''தறி இறை''  எனவும்,வியாபாரிகள் ''அங்காடி பாட்டம்''எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் "ஓடக்கூலி " எனவும், மானாடு தேவர்கள் " நாடு காவல் " எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ''இலை கூலம்'' எனவும் , 

இந்த பொருளாதாரத்தைக்கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது

திருமந்திரம்

    'ஹரி ஓம் ராமானுஜாய'
          இந்த திருமந்திரத்தை தினசரி ஓதி வந்தால், திருமணத்தடைகள் நீங்கும், நல்லவரன்கள் அமைவார்கள், குழந்தை பாக்கியம் ஏற்படும்,தொழிலில் ஏற்பட்ட தேக்கநிலை சீர்படும்,தொழில் மேன்மையடையும்,  வேலையாட்கள் தொந்தரவுகள் குறைந்து  நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதர விரையம் குறையும், நவகிரகங்களினால் ஏற்ப்படும் பாதிப்புகள் நிவர்த்தியாகும், மனோதைரியம் கிடைக்கும், நிம்மதி ஏற்படும் , எடுத்த நல்ல காரியங்கள் சித்தியாகும், எதிரிகள் இல்லாது போவர், காரியதடைகள் நீங்கும், புகழும் கீர்த்தியும் கிட்டும் எதிர்காலம் இனிமையானதாக மாறும்

Sri Vayanapperumaal

                   அருள்மிகு வயனப்பெருமாள், தெற்கு வீட்டையா  என்றும் அழைக்கப்படுகிறார், உடம்பில் ஏற்ப்படும் கட்டிகள் நீங்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்ப்படும் கஷ்டத்தை போக்கவும் ,வெள்ளியாலான பொருட்களை காணிக்கை செலுத்தி நோய் நீங்கப்பெறுகிறார்கள்

Hanumaan


அனுமன் சன்னதி மண்டபத்தின் தெற்கு பக்க தோற்றம் 

Sri Thiruppuli Aalvaar

பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வரும் நிலையில் எம் பெருமான் நாராயணன் பருந்து வாகனத்தின் மீது அமர்ந்து பறந்த வண்ணம் உள்ளார். இவர் இத் திருத்தலத்தில் திருப்புளி ஆழ்வாராக திருநாமம் பெற்று விளங்குகிறார், இது வேறு எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாகும் .( நாம் தான் அழைக்க வேண்டும் அவனே கதி என்று )

Aathiswamy (ஆத்திசுவாமி)

ஆத்தி சுவாமியின் அருள்மிகு தோற்றம்

Sri Aathiswamy

இக்கோவில் பக்தர்கள் தங்களின் இல்லத்தில் நடைபெறும் விசேசங்களுக்கு முதலில் ஐந்து வீட்டு தெய்வங்கள் அனைத்திற்க்கும்  அழைப்பிதழ் வைத்து அழைத்த  பின்புதான் மற்றவர்களை அழைக்கின்றனர் 

Aathi Swamy Sannathi



ஆத்தி சுவாமி சன்னதி வாசலும், வாசல் கதவுகளில் கலை நயம் மிகுந்த வேலைபாடுகளும்

Sri Vayanapperumaal Sannathi


வயனப்பெருமாள்  சன்னதி மண்டபத்தின் முகப்பு  தோற்றம்

Palliyarai Mandabavam

இந்த மண்டபவம் ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாச்சல சுவாமி  அவர்களின் தாய் தந்தையரால் குழந்தை வரம் கிடைத்ததற்காக கட்டிக் கொடுக்கப்பட்டது 

விளக்கு


கல்லினால் செய்த குத்துவிளக்கு

Sri Vayanapprumaal


முஸ்லிம் மசூதி போல் அமைந்துள்ள வயனப்பெருமாள் சன்னதி மேல் கூரை 

Periyapratti Ambal



குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் செலுத்தி உள்ள வளையல் காணிக்கைகள் 

Arulmiku Vealandi Swamikal Madam



கிழக்கு வாயில்புறத்தின் முன் அமைந்துள்ள வேலாண்டி சுவாமி மடம்  

Arulmiku Periyapratti

மதுரை மீனாட்சியம்மன் இத் திருத்தலத்தில் ஸ்ரீ பெரியபிராட்டியாக அருள் புரிவதாக கருதப்படுகிறது .
   குழந்தை பேறு இல்லாதவர்கள்,குழந்தை வரம் வேண்டி அம்மனை வழிபட்டு  அருள்  பெற்று  செல்கிறார்கள் ,பின்பு குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு வளையல்கள் காணிக்கையாக படைக்கிறார்கள்

Aathiswamy Kovil

                                          -: ஆன்மா உயிர்  விளக்கம் :-
                                            
    ஓர் அறிவு உள்ள மண்ணுக்கு உயிர் உண்டு , இரண்டு அறிவு உள்ள மரம் செடி கொடிகளுக்கு உயிர் உண்டு,   மூன்று   அறிவு   உள்ள    ஊர்ந்து செல்லும் ஜந்துக்களுக்கு உயிர் உண்டு, நாலறிவு கொண்ட மிருகங்களுக்கு உயிர் உண்டு,   ஐந்தறிவு   கொண்ட பறவைகளுக்கு   உயிர்   உண்டு,   ஆனால், அவைகளுக்கு, ஆன்மா இல்லை,  ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டும்தான் ஆன்மா உண்டு.
             மண்ணை தோண்டினால், மரத்தை வெட்டினால் ,மீனை   பிடித்தால், ஆடுகளை வெட்டினால் கொலை இல்லை,காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை ,மருத்துவர் ஊசி போட்டால் கிருமிகள் சாகும் ,விவசாயி  பயிர்களில் பூச்சி மருந்து அடித்தால் பூச்சிகள் சாகும் அதனால் , இவர்கள்  எல்லாம் கொலையாளிகளா  இல்லையே,  காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை,
 எனவே ஆலயங்களில் ஆடு ,கோழி ,ஆத்தி( பன்றி) இவைகளை படைப்பது பலியாகாது ,ஆண்டவன் விரும்பும் பொருள்கள்தான் ,இதில் தவறு ஒன்றுமில்லை , என்பது  பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami

-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:-



திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த ராமசாமி நாடார் , சிவனைந்த அம்மாள் தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என வருந்தி ஆத்திசுவாமி கோவிலில் விரதம் இருந்தனர். .   விரதமிருந்த தம்பதியரிடம் திருமணியும், தீர்த்தமும் கொடுத்து விரைவில் உங்களுக்கு ஆண்மகன் பிறப்பான், அவனுக்கு அருணாசலம் என பெயர் சூட்டுமாறும், அந்த குழந்தையின் வாழ்வு பற்றியும் அருளினார் ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் இருந்த தவத்திரு வேலாண்டிசுவாமிகள், அதன் பயனாய் பிறந்த குழந்தைதான் ஆடி அமாவாசை அன்று எரலில் சிறப்பாக கொண்டாடப்படும்  ஏரல் சேர்மன் அருணாச்சல  சுவாமிகள்,  அதன் நினைவாக,  ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடார் கட்டிகொடுத்ததுதான், ஆத்திசுவாமி கோவிலில் இப்பொழுது உள்ள பள்ளியறை  கட்டில்  மண்டபம். இங்கு பணிவிடை செய்பவர்களால் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் சந்நியசிகளில் ஒருவர்தான் வேலாண்டி சுவாமிகள் ,அவர் சமாதியான இடம்தான் கோவில் கோட்டை சுவருக்கு வெளியில்  கிழக்கு புறம் உள்ள வேலாண்டி சுவாமிகள் மடம்.



Poojai

  இக் கோவிலில் பூஜையின் போது மேளம், தாளம், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதில்லை,  மந்திரங்கள் ஓதுவதில்லை          மவுனமாக நடக்கிறது, ஆனால் ஆலயத்தின் மணி மட்டுமே ஒலிக்கிறது, திருவிழாவின் போது சாமி ஊர்வலம் இல்லை, இங்கு சக்தி வழிபாடு தொன்று தொட்டு நடக்கிறது, எனவே பெண்களுக்கு சிறப்பு உரிமை வழங்கப்படுகிறது, பூஜை பொருள்களை பெண்கள் தொட்டு வணங்கிய பிறகு தான் சுவாமிக்கு படைக்கபடுகிறது .

Thai Thiruvilaa

                                                     ​ -:தை திருவிழா:- 
                                          
  அருள் மிகு வயனப்பெருமாள்,  அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையாக தை மாதம் 5 ம் தேதி தொடங்கி முதல் மூன்று நாட்கள் தை பூஜை திருவிழா நடைபெறுகிறது

Chitthirai Thiruvilaa

                                                 சித்திரை திருவிழா
                                    
அருள் மிகு பெரியசுவாமி,  ஆத்திசுவாமி,  பெரியபிராட்டி,  திருப்புளி ஆழ்வார் கோவில் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுகள் தோறும் சித்திரை   18 ம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரை  பூஜை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது

பக்தர்களின் கவனத்திற்கு அறிந்து கொள்ளுங்கள்

         மேக்கட்டி  பூஜை நடை பெறும் நாட்களான தை 5 ம் தேதியும், சித்திரை மாதம் 18 ம் தேதியும் காதுகுத்து , முடி காணிக்கை அனுமதிக்கப்படுவதில்லை , பணிவிடைகள் தை 5 ம் தேதியும்,சித்திரை 16 ,17 ,18      ம் தேதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை, சித்திரை 23 ம் தேதி அன்னமுத்திரி பூஜை  அன்று மாலை 5  மணிக்கு மேல் தான் பணிவிடை அனுமதிக்கப்படுகிறது , தமிழ் மாத கடைசி வெள்ளி கிழமைகளிலும் .திரு கார்த்திகை , தை முதல் தேதி அன்றும் பணிவிடை  கிடையாது ,மேற்படி நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பணிவிடைகள் அனுமதிக்கப்படுகிறது

திருமணி Thirumani

இத் திருக்கோவில்லில்  பிரசாதமாக வழங்கப்படும் திருமணி சுவாமி அருளால் மிக சக்தி வாய்ந்ததாகவும், உயர்வானதாகவும் விளங்குகிறது, இது வெள்ளை நிற மன்கட்டியை இடித்து பொடியாக்கி தண்ணீர் விட்டு பிசைந்து உருட்டி நன்கு வெயிலில் காயவைத்து ''திருமணி'' தயாரிக்கப்படுகிறது 
 இதை  பக்தர்கள் நெற்றியில் பொட்டுஆகவும் ,மொட்டை எடுத்தபின் தலையில் பூசிக்கொள்ளவும், வியாதி உள்ளவர்கள் தண்ணிரில் கலந்து குடித்தும்   குணமடைகிறார்கள்,  பூஜையின் போது பூசாரியால் பக்தர்களின் நெற்றியில் பொட்டு இடவும் பயண்படுத்துகிறார்கள், திருமணியின்  மகிமையினால் பலனடைவதால்  பக்தர்கள் தங்கள் குழந்தைக்கு திருமணி என்று பெயர் சூட்டுகிறார்கள் ,இங்கு குங்குமம் ,திருநீறு வழக்கத்தில் இல்லை

ஆத்தி மரம் Aathi Tree

                                              ஆத்தி மரத்தின் மகிமை 
                                     
தீராத வியாதி உள்ளவர்கள் இத் திருத்தலத்தில் தங்கி, ஆத்திமர இலைகளை  அரைத்து தண்ணிரில் கலந்து குடித்து,ஆத்திசுவாமி  அருள் பெற்று குணமாகிச் செல்வது நடைபெறுகிறது ....

அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

    அன்பர்கள் இந்த வலை பதிவை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை, இந்த வலைபதிவில் கருத்துரைகள் என்பதில் பதிவு செய்ய வேண்டுகிறோம் , அது இந்த வலை பதிவின் தரத்தை வளர்க்க உதவும், மேலும் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் அவசியம் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள், மேலும் உறவுகளுக்கும் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்திடுங்கள். தங்களுக்கும், தங்களை சார்ந்தோருக்கும் ''ஐந்து வீட்டு சுவாமி '' திருவருள் பரி பூரணமாக கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

Aathiswamy Temple

குழந்தை வரம் தந்த குலதெய்வத்திற்கு, முடி காணிக்கை கொடுத்து, காது குத்தி கொள்கிறார்கள்

Aathiswamy Temple

நிம்மதி தரும் திருத்தலத்தின்,  ஒரு பகுதியின்  எழில் மிகு தோற்றம்

Sri Periyaswamy

அருள் மிகு பெரியசுவாமியின் சயன கட்டில்,  இந்த இடத்தின் அருகில் பணிவிடை பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் ஏரல் அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடாரால் கட்டி கொடுக்கப்பட்டது.

Sri Periyaswamy Pooja

  எல்லா தெய்வ சன்னதியிலும்   கடவுளுக்கு அடுத்த நிலையில் பூசாரிகளுக்கு மரியாதையை கொடுக்கபடுகிறது, பக்தர்கள் தெய்வ   திரு உருவை நெருங்க முடியாது, ஆனால் இங்கு கடவுளை தொட்டு வணங்கலாம்,  வணங்கும் போது பூசாரிகளும் (அண்ணாவி) பக்தர்களுடன் நின்று பூஜை செய்கிறார்கள்  இது கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது,  இத் திருக் கோவிலின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே மிகவும் உன்னதமான இருந்து  உள்ளது , இந்தக்கோவில் தெய்வங்களை  நம் குல தெய்வமாக அடைய பெற்றதற்கு நாம் பெருமை கொள்ளுவோம்,
                                        ஹரி ஓம் ராமானுஜாய 
                                        ஹரி ஓம் ராமானுஜாய
                                        ஹரி ஓம் ராமானுஜாய...................

HINDU + ISLAAM= Aathiswamy Temple

    இத்திருத்தலத்தில் இஸ்லாமியர்களை போன்ற பழக்க வழக்கங்களும் கடைபிடிக்கபடுகின்றன, முஸ்லிம்கள் ''பாத்தியா''  ஓதாமல் ஆட்டு கிடாயகளை  பலி இடுவதில்லை, அதை போலவே  இங்கும் பணிவிடைக்காக கொண்டு வரும் கால்நடைகளின் காதுகளில் மந்திரம் ஓதி பாதப்பால் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணிவிடைக்கு ஆயத்தமாக்கபடுகின்றன,  இக் கோவில் பாதப்பால்  கொடுக்காமல் செய்யப்படும் பணிவிடைகள், கோவிலில் பாதப்பால் கொடுத்தும் கோட்டைக்கு வெளியில் வைத்து தயார் செய்யப்பட்டவைகளும்  பணிவிடை பூஜைக்கு அனுமதிக்க படுவதில்லை

Meakkatti Pooja

                              மேக்கட்டி பூஜை வரலாறு 
                                              ,,,,,,,,,
பெரியசுவாமிகள் தான் வெளியில்     செல்கையில் துண்டு வேட்டி ஒன்று விரித்தார்போன்று , பெரியசுவாமின் தலைக்கு மேலே பறந்து நிழல் கொடுத்துக்கொண்டு செல்லும் ,மேலே சூரியனைகட்டியதால், ''மேல்கட்டி '' என்ற சொல் நாளடைவில் மேக்கட்டியானது .   இதை நினைவு கூறும் முகமாக சித்திரை திருவிழா, தை திருவிழாவின் போது மேக்கட்டி கட்டுகின்றோம்

தோக்க பணிவிடை Thokka Banividai

                              
               
                                            

கோவில் முகவரி (TEMPLE ADDRESS),

                                 IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
                                 CHETTIYAPATHU- 628 203
                                 THIRUCHENTHUR- TALUK
                                 THOOTHUKUDI- DISTRIC
                                  TAMILNADU-- INDIA
                                  PHONE-04639-250630
                                  

Arulmiku Aathiswamy

ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக  புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை  யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும்  கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது  

Sri Periyapratti


Sri Aathiswamy


ஆத்திசுவாமிக்கு, செருப்புகள் நேர்த்தி கடனாக செலுத்தப்படுகின்றன. இந்த வழக்கம் உலகில் வேறு எந்த திருத்தலத்திலும் கிடையாது.

Mandabam






Sri Kuthirai Swamy



       குதிரை ஆத்திசுவாமியின் வாகனமாக உள்ளதால் குதிரையும் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
  ஆத்திசுவாமி தன்பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றவும், துன்பத்திலிருந்து காக்கவும் குதிரை வாகனம் ஏறி வந்து காத்தருளுகிறார்.

கோயில்மண்டபம் (Mandabam)







இத் திருத்தலத்தின் கிழக்கு வாசலில் உள் நுழையும் போது தென்படும் மண்டபவங்களின் எழில்மிகு தோற்றம்