அருள்மிகு சோலையப்பசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருள்மிகு சோலையப்பசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சோலையப்பர்

#சோலையப்பர்சுவாமி 

செட்டியாபத்து  ஐந்து வீட்டு கோவில் பெரியசுவாமிகளின் சீடர். குருவின் கட்டளையை ஏற்று  செட்டியாபத்தில் இருந்து வடக்கு நோக்கி  புறப்பட்டு செல்லும் போது...

எப்போதும்வென்றான் என்கிற கிராமத்தை சென்றடைகிறார். குருவின் வாக்கை மெய்பிக்கும் வகையில் நிலம் பெரும் வெடிப்பாக இருந்ததால் இந்த ஊரிலே தவம் இருக்கிறார். 

திருமணிமாலை என்னும் அற்புதமான பாடல்களை எழுதி இருக்கிறார். 

நம் கலாச்சாரத்தில் இவரை போன்ற பல சித்தர்களை பற்றிய தகவல்கள் சரியாக பதியப்படவில்லை. 

இன்றைக்கும் பல குடும்பங்கள் தங்களின் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். 

சித்தர் சமாதி ஸ்தலத்தில் சைவம் அசைவம் என படையல் படைக்கபடுவதை வேறு எங்கும் காணமுடியாது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. 

அன்றைய சமூக கட்டுபாடுகளை தகர்த்து. எல்லோரும் சமமாக பாவித்து தாழ்த்தபட்ட மக்கள் வழிபட செய்துள்ளார். 

எல்லோருக்கும் சமபந்தி விருந்து, பெண்கள் வழிபட கட்டுபாடுகள் ஏதுமில்லாமல் மக்களுக்கு தன் அருளை ஆசியாக வழங்கிய சோலைசாமி என்கிற சோலையப்பர் சமாதிக்கொண்டுள்ள இந்த இடம் நூற்றாண்டுகளையும் கடந்து இன்றைக்கும் தன் அதிர்வுகளை வெளிபடுத்தி கொண்டு இருக்கிறது. 

சோலையப்ப சுவாமி சமாதி


             -:அருள்மிகு சோலையப்ப சுவாமி சமாதியின் தோற்றம்:-                                    செட்டியாபத்து  ஐந்துவீட்டு சுவாமி  கோயிலில் உள்ளது போன்றே, 'எப்போதும் வென்றான்''  ஊரில் உள்ள அருள் மிகு பெரியசாமியின் சீடரான 'சோலையப்பசாமி'களின் சமாதி ஆலயத்தில் திருமணி இடுவது மற்றும் பூஜை முறைகள் யாவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்
 திருவிளக்கு


 கருவறை வாசல்
 சன்னதி நுழைவு வாசல் 


 கருவறையின் முன்புறமுள்ள மண்டபம்








 சோலையப்ப சுவாமிகள் திருக்கோயில் நுழைவு வாசல்
பின்புற வாசல்