குலதெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குலதெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குலதெய்வம் தெரியவில்லையா...


தங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லையா கலக்கம் வேண்டாம்.

ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று.

தமிழ்நாட்டில் பல குடும்பங்களுக்கும், பல ஜாதியினர்களுக்கும் இதுவே பாரம்பரிய குலதெய்வமாக இருக்கிறது.

ஐந்து வீட்டு சுவாமிகள் கோயில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகில் உள்ள செட்டியாபத்து என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பிரசித்தி பெற்ற கோயில்.

இந்தக் கோயிலில் ஒரே வளாகத்தினுள் ஆறு முக்கிய தெய்வங்களும், ஐந்து சன்னிதிகளும் அமைந்துள்ளன. இந்த ஐந்து சன்னிதிகள் அமைந்துள்ளதால் "ஐந்து வீட்டு சுவாமிகள்" என்று அழைக்கப்படுகிறது.

 இங்கு வீற்றிருக்கும் முக்கிய தெய்வங்கள்:
பெரியசாமி( சங்கு சக்கரம் ஏந்திய நாராயணன்),
பெரியபிராட்டி அம்மன் (மீனாட்சி அம்மன் வடிவம் என்றும் கருதப்படுகிறது),
வயனப்பெருமாள், மற்றும் அனந்தம்மாள்,
ஆத்தி சுவாமி,
திருபுளி ஆழ்வார்,
ஆஞ்சநேயர் (பெரியசாமி சன்னிதிக்கு எதிரே இருக்கிறார்)

இந்தக் கோயிலின் ஒரு சிறப்பு என்னவென்றால், ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியைத் தொட்டு தரிசனம் செய்யலாம்.

ஏன் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக ஏற்க வேண்டும்?

பழமையான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த கோயில். இது பல நூற்றாண்டுகள் பழமையான கோயில். இங்கு வழிபடுவோருக்கு பலவிதமான நன்மைகள் நிகழ்கிறது.

 குழந்தைப்பேறு, நோய்கள் தீருதல், மன அமைதி போன்ற பல பிரார்த்தனைகள் இங்கு நிறைவேறுகின்றன. 
பல குடும்பங்களுக்கு இது பரம்பரை குலதெய்வமாகவே இருந்து வருகிறது.

 உங்கள் குடும்பத்தில் குலதெய்வம் எது என்று தெரியாத நிலையில், உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை ஆராயும்போது, இந்தக் கோயிலின் தொடர்பு இருந்தால், இது உங்கள் குலதெய்வமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
 
குலதெய்வம் தெரியாதவர்கள், பரவலாக வணங்கப்படும் சக்தி வாய்ந்த தெய்வங்களை தங்கள் குலதெய்வமாக ஏற்று வழிபடுவது உண்டு. அந்த வகையில் பார்த்தால் ஐந்து வீட்டு சுவாமிகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆண்டுகள் தோறும் சித்திரை மாதம், தை மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது, மேலும் அமாவாசை பௌர்ணமி தினங்களிலும், ஒவ்வொரு தமிழ் மாசம் கடைசி வெள்ளியன்று அதாவது மாதாந்திர வெள்ளியன்று  சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. தினசரி மூன்று வேளை பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

 இங்கு வழங்கப்படும் "அன்னமுத்திரி" பிரசாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு படையல் இடுவது வழக்கம்.

எவ்வாறு குலதெய்வமாக ஏற்றுக்கொள்வது?

குலதெய்வம் யார் என்று உங்களுக்குத் தெரியாத நிலையில், ஐந்து வீட்டு சுவாமிகளை உங்கள் குலதெய்வமாக ஏற்க விரும்பினால், நீங்கள் முழு மனதுடன் இந்த தெய்வத்தை உங்கள் குடும்பத்தின் காவல் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கலாம்.

முடிந்தால், செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் கோயிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்யலாம். அங்கு உங்கள் கோரிக்கையை வைத்து, "இன்று முதல் எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமிகளே" என்று மனமுருகி வேண்டலாம்.

 நேரில் செல்ல இயலாவிட்டால், வீட்டில் ஐந்து வீட்டு சுவாமிகளின் படத்தை ஒரு இடத்தில் வைத்து ஐந்து வீட்டு சுவாமிகளை மனதில் நினைத்து வழிபடத் தொடங்கலாம்.

மனமுருகிப் பிரார்த்திக்கலாம்.
குலதெய்வ வழிபாடு என்பது ஒருவரின் குடும்ப அமைதி, சுபிட்சம் மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது.

 ஐந்து வீட்டு சுவாமிகளை உங்கள் குலதெய்வமாக ஏற்பது உங்கள் குடும்பத்திற்கும், குலத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். "ஹரி ஓம் ராமானுஜாய" "அடியேன் தாசன்"
 அன்புடன் ஆத்தியப்பன் S

குலதெய்வம்


குலதெய்வம் என்பது எங்கோ உள்ள ஒரு தெய்வத்தையோ அல்லது ஏதோவொரு சக்தியையோ வணங்குவது இல்லை.
நம்முடைய மூதாதையர்களில் ஒருவர், தன்னுடைய சந்ததிகளுக்கு தன்னை தியாகம் செய்தவராகவோ அல்லது இறைநிலை அடைந்தவர் ஆகவோ இருப்பர்.அவரை, அவருடைய தலைமுறையினர் வணங்கி வருகிறார்கள்.அந்த தலைமுறையினர் வணங்கி வந்தாலும் வணங்காமல் இருந்தாலும் குலதெய்வம் அவர்களை எப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்.ஒரு தந்தை தன் குழந்தையை விளையாட விட்டு பார்த்துக் கொண்டு இருப்பது போல்.
குலதெய்வத்தை வணங்க மந்திரங்களோ மற்றும் தந்திரமோ தேவையில்லை.
குலதெய்வத்தின் மேல் ஒரு அன்பான மனோநிலையே.
குலதெய்வத்தை தன்னுடைய தந்தை, தாயைப் போல் நேசிக்க வேண்டும்.

குலதெய்வம் சில நேரங்களில் நமக்கு துன்பத்தையும் தரலாம். அப்போதும் நேசிக்க வேண்டும்.
குலதெய்வம் நமக்கு இன்பத்தை தரும் போது மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்.துன்பம் வரும் போது அவனிடம் கோபித்துக் கொள்ளலாம்.
கோபித்துக் கொண்டாலும் அவனை மறக்க கூடாது.
மற்ற கோவில்களுக்கு செல்லும் போது இருப்பதையும், தன்னுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உள்ள மனோநிலை பாருங்கள்.அது தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு சென்ற ஒரு திருப்தியான மனோநிலை இருக்கும்.
நல்ல வாழ்க்கை அமைந்தால் குலதெய்வத்தை வாழ்த்துங்கள்.
துன்பமான வாழ்க்கை அமைந்தால் மனதில் உரிமையோடு, அன்போடு திட்டுகள் இறைவன் உடனே உங்களுக்கு கனவின் வழியாகிலும் பதில் சொல்லுவான் .