பெரியசுவாமி, சோலையப்பர்




திருப்புளி ஆழ்வார்



  ஆழ்வார் திருநகரியில்  அற்புதங்கள் நிகழ்த்திய பெரியசுவாமிகளும் சோலையப்பரும் செட்டியாபத்து ஊருக்கு திரும்ப எண்ணி அங்கு வாழ்ந்து வந்த அந்தன மக்களிடம் விடைபெற்று கொண்டு பின்பு திருப்புளி ஆழ்வாரிடமும் விடைபெற வந்தபோது பெரியசாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து கொண்டிருந்த திருப்புளி ஆழ்வார், தானும் பெரியசாமிகளுடன் வந்து தங்கியிருக்க விருப்பம் கொண்டார், அதை ஏற்று பெரியசாமிகளும் சோலையப்பரும் அவரை "அவர் வளரவளர வளரும் தொட்டிலோடு" ஸ்ரீ லட்சுமன அவதாரமாகிய திருப்புளி ஆழ்வாரையும் தூக்கி கொண்டு வந்தார்கள், செட்டியாபத்தில் திருப்புளி ஆழ்வார் தங்கியிருந்த இடம்தான் திருப்புளி ஆழ்வார் சன்னதி அல்லது திருகுழந்தை ஆழ்வார் சன்னதி என்று அழைக்கப்பட்டு வணக்கப்பட்டு வருகிறது.

ஆத்தி பணிவிடை

 ஏன் இந்த தொட்டி தெரியுமா? நமது கோவிலில் ஆத்தி பணிவிடையின் போது, பெரியசாமி சன்னதியில் ஆத்திக்கு பாதபால் கொடுத்து அண்ணாவி ஆத்தி காதில் மந்திரம் ஓதியபின் ஆத்தி தானாக வந்து இந்த கல் தொட்டியில் நிரப்பி வைத்துள்ள மஞ்சள் கலந்த நீரில் தானாகவே வந்து மூழ்கி தனது உயிரை மாய்த்து கொள்ளும், இந்த அதிசயம் காலம்காலமாக ஐந்துவீட்டு சுவாமிகள் திருக்கோவிலில் நடந்து வருகிறது.