ஆத்திசுவாமி Arulmiku Aathiswamy Chettiyapathu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்திசுவாமி Arulmiku Aathiswamy Chettiyapathu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

HINDU + ISLAAM= Aathiswamy Temple

    இத்திருத்தலத்தில் இஸ்லாமியர்களை போன்ற பழக்க வழக்கங்களும் கடைபிடிக்கபடுகின்றன, முஸ்லிம்கள் ''பாத்தியா''  ஓதாமல் ஆட்டு கிடாயகளை  பலி இடுவதில்லை, அதை போலவே  இங்கும் பணிவிடைக்காக கொண்டு வரும் கால்நடைகளின் காதுகளில் மந்திரம் ஓதி பாதப்பால் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணிவிடைக்கு ஆயத்தமாக்கபடுகின்றன,  இக் கோவில் பாதப்பால்  கொடுக்காமல் செய்யப்படும் பணிவிடைகள், கோவிலில் பாதப்பால் கொடுத்தும் கோட்டைக்கு வெளியில் வைத்து தயார் செய்யப்பட்டவைகளும்  பணிவிடை பூஜைக்கு அனுமதிக்க படுவதில்லை

Arulmiku Aathiswamy

ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக  புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை  யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும்  கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது  

Sri Aathiswamy


ஆத்திசுவாமிக்கு, செருப்புகள் நேர்த்தி கடனாக செலுத்தப்படுகின்றன. இந்த வழக்கம் உலகில் வேறு எந்த திருத்தலத்திலும் கிடையாது.

ஆத்திசுவாமி

ஆத்திசுவாமி அற்புதங்கள் 
-----------------------
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பழனியப்பபுரம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் ஆத்திசுவாமிக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆட்டுகிடாய் ஒன்று அருகில் உள்ள வேற்று மதத்தினர் ஒருவரின் தோட்டத்தில் மேய, அதனை கோவில் கிடா என்றும் பாராமல் தடியால் அடிக்க, கிடாய்க்கு சொந்தக்காரர், அடித்த நபர் தெய்வ நிந்தனைக்கு ஆட்பட்டு விடக்குடாது என்று கருதி ஆத்திசசுவாமி கோயில் கிடாய் என்று கூற, தோட்டக்காரர் உடனே  ஆத்திசுவாமி கிடாய்க்கு என்ன?  மூன்று கொம்புகளா என அகங்காரமாக கேட்க,  ஆத்திசுவாமி அருளால் உடனே அந்த  கிடாய்க்கு அன்றிலிருது மூன்றவதாக ஒரு கொம்பும் முளைத்த அதிசயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததும், அந்த கிடாய் கோவில் பணிவிடைக்கு கொண்டுவரப்பட்டதும் மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும்.
       ஆட்டுகிடாய் மேல் விழுந்த அடி ஆத்திசுவாமி மேல் விழுந்த அடியாக நினைத்து பதறிய பக்தருக்கு,  நான் உன்னுடன இருக்கிறேன் என்பதை  உணர்த்தவும், அகங்காரமாக பெசியவனின் மமதையை அடக்கவும் இந்த அற்புதம் நிகழ்நதுள்ளது.
             இதனால் நாம் முழு மனதோடு ஆத்திசுவாமி மேல் நம்பிக்கை வைத்தால் அவர் நம்முடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவார் என்பது தெளிவாகிறது .