அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அனுபவம்

அது என்னமோ தெரியலை... கோவிலுக்கு போனா... இந்த மனசு நம்மை தவிர கோவிலில் வேறுயாரும் இருக்க கூடாதுன்னே... நெனைக்குது...

கோவிலில் என் அனுபவம்

        நான் குட்டி பையனா இருக்கும் போது ஒரு முறை கோவிலுக்கு போயிருந்தோம், அப்போ கோவிலில் இரவு சாப்பிட உக்காரும் போது எனக்கும் என் தங்கச்சிக்கும் சண்டை வந்துருச்சி.. அப்போ எங்க அய்யா என்னை அடித்துவிட்டார்கள், உடனே நான் கோவித்துக் கொண்டு சாப்பிடாமல் சென்று விட்டேன் பிறகு எல்லோரும் என்னை தாஜா செய்து சாப்பிட கூப்பிட்டார்கள் ''அப்போ'' எனக்கு பிடிவாதம் சற்று கூடுதல் எனவே நான் சாப்பிட வராமலே இருந்தேன், அப்போ எங்க அண்ணன் என்னை தூக்கி கொண்டு போய் சாப்பிட வைக்க முயற்ச்சி செய்தார் நான் அவருடைய பிடிக்கு சிக்காமால் ஓடிக்கொண்டு இருந்தேன், அப்போ எல்லோரும் என்னை பிடித்து சாப்பிட வைக்க விரட்டினார்கள் எனக்கு ஒரு அளவுக்கு மேல் ஓட முடியவில்லை, உடனே நான் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து யாராவது பக்கத்துல வந்தீங்கங்ன்னா கல்லை கொண்டு மண்டையை உடைத்து விடுவேன்னு மிரட்டினேன். பிறகு எல்லோரும் நீ சாப்பி்டுறுதுன்னா சாப்பிடு, இல்லாட்டி பட்டினியா கிடன்னு சொல்லிவிட்டு படுத்து விட்டார்கள், நான் அந்த கல்லை கையில் வைத்தபடியே நின்று கொண்டே இருந்தேன், சிறிது நேரத்தில் எனக்கு கடுமையா பசிக்க ஆரம்பித்து விட்டது, என்ன செய்வதுன்னு ஒன்னும் தெரியலை, நான் அப்படியே சத்தம் வராமல் அழ ஆரம்பித்து விட்டேன், கண்ணீரை துடைத்துக்கொண்டே அழுது கொண்டு இருந்தேன், எல்லோரும் தூங்கி விட்டார்கள். கொஞ்ச நேரம் போயிருக்கும் என் கையில் இருந்த கல் சற்று பிசுபிசுன்னு இருந்தது. என்னடா கல் பிசுபிசுப்பா இருக்கேன்னு பாத்தா அது பனங்கருப்பட்டியா இருந்துச்சு, மனசுல எனக்கு பயங்கர ச்ந்தோசமாகிப்போச்சு. உடனே அதை தின்று விட்டு சிறிதளவு கையில் மீதம் வைத்து கொண்டு நானும் தூங்கி விட்டேன், எங்க அம்மா இரவு நான் சாப்பிடவில்லை என்பதால் சற்று சீக்கிரமே எழுந்து என்னை சாப்பிட வைப்பதற்காக என்னை தேடி எழுப்பினார்கள், எழுப்பிவிட்டு கையில் மீதி இருந்த கருப்பட்டியை பார்த்துவிட்டு ஏது உனக்கு கருப்பட்டின்னு கேட்டார்கள், நான் நடந்ததை கூறினேன், எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியமாகி போச்சு... உங்களுக்கு...!!!                      S ஆத்தியப்பன்