108 முறை மந்திரம் சொல்ல எளியவழி

108  முறை மந்திரம் சரியாக சொல்ல பல முறைகள் உண்டு
1 . மல்லிகை பூ மொட்டுகளை 108 எண்ணி எடுத்துக்கொண்டு பூஜையின் போது ஒவ் வொன்றாக சுவாமிகளின் மேல் பணிவாக போட்டு மந்திரம் சொல்லலாம் ஒரு பூவை போட்டதும் ஒருமுறை மந்திரம் சொல்ல வேண்டும்
2 . 108  ருத்ராட்சம் உள்ள மாலையை கையில் வைத்துக்கொண்டு அடையாள ருத்ராட்சத்திலிருந்து ஒரு ருத்ராட்சத்தை நகர்த்தியதும் ஒருமுறை மந்திரம் சொல்லவேண்டும் பின்பு அடுத்த ருத்ராட்சத்தை நகர்த்தியதும் அடுத்த முறை மந்திரம் சொல்லவேண்டும் இப்படியே 108  முறை சொல்லலாம்

3 . இது மிகவும் எளிய வழி நாம் எங்கிருந்தாலும் மற்ற யாரும் நம்மை கவனிக்காமல் நம் மனதுக்கு மட்டும் தெரியும் படி நாம் மந்திரம் சொல்லி இறை அருள் பெறலாம் 108 முறையும் சரியாக சொல்லலாம்
   நமது கை விரல்கள் ஒவ்வோன்றிலும் மூன்று மடக்குகள் உள்ளன,எனவே இடது கையில், சுண்டு விரல் மோதிரவிரல் நடுவிரல் மூன்றையும் தேர்வு செய்து கொள்ளுங்கள், வலது கையில் சுண்டு விரல், மோதிரவிரல், நடுவிரல்,ஆள்காட்டி விரல் நான்கையும் தேர்வு செய்து கொள்ளுங்கள் இப்பொழுது இடது கை மூன்று விரல் மடக்குகள் மொத்தம் ஒன்பது,வலது கை விரல் மடக்குகள் பன்னிரெண்டு ஆக மொத்தம் நூற்றியெட்டு, முதலில் இடது கை சுண்டு விரல் நுனியில் உள்ள முதல் மடக்கில் இது கை பெருவிரல் கொண்டு தொட்டு அடையாளமிட்டு கொள்ளுங்கள்,பின்பு வலக்கை சுண்டுவிரல் நுனியில் வலது கை பெருவிரல் கொண்டு தொட்டு ஒருமுறை மந்திரம் சொல்லுங்கள் அதன் பிறகு வலக்கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லுங்கள் இப்படியாக நான்கு விரல்களிலும் பன்னிரெண்டு முறை சொல்லிவிட்டு இடது கை சுண்டு விரலில் பெருவிரலை இரண்டாவது மடக்கிற்கு நகர்த்தி அடையாளமிட்டுக்கொள்ளவும் பின்பு வலது கையில் முன்பு போலவே செய்யுங்கள்,இப்படி இடது கை விரல் ஒரு மடக்கிற்கு வலது கைவிரல் பனிரெண்டு மடக்குகள் வீதம் எண்ணுங்கள் 108 சரியாக வரும்
                                
                                       ஹரி ஓம் ராமானுஜாய

4 கருத்துகள்:

ESWARAN சொன்னது…

CHANGE THE ENTRANCE PHOTO. WHAT U HAVE PUT IS BACKSIDE ENTRANCE. SO PLS REPLACE IT WITH THE REAL ENTRANCE PHOTO.

S Athiappan சொன்னது…

வலை பதிவில் முகப்பாக வைத்துள்ள வாசல்தான் கோவிலின் முக்கிய வாசல், கிழக்கு வாசல், என்பதை நண்பருக்கு தெரியபடுத்திக்கொள்கிறேன்

S Athiappan சொன்னது…

நண்பர் karu ramesh அவர்களுக்கு வணக்கம். மந்திரம் ''ஹரி ஓம் ராமானுஜாய '' என்பதாகும். ராமானுஜாயர் அல்ல

ஐந்து வீட்டு சுவாமி கோவிலை குலதெய்வமாக கொண்டவர்கள் அனைவரும் எட்டெழுத்து மார்க்கத்தை பின் தொடர்பவர்கள் அந்த எட்டெழுத்து மந்திரம்தான் ''ஹரி ஓம் ராமானுஜாய " என்பதாகும்.நமது திருக்கோவிலில் இந்த மந்திரம் பல காலங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

இந்த மந்திரத்தை அருளியது யார்?என்பது எனக்கு சரியாக தெரியவில்லை இருப்பினும் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் அடைந்தவர்கள் நிறைய உள்ளனர் எனவேதான் மந்திரம் பற்றிய பதிவை பதிவு செய்தேன்

rameshananth சொன்னது…

ஐயா தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதமான பதிவுகள்