பனையறுப்பு பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனையறுப்பு பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பனையறுப்பு பொங்கல்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி நடப்பு ஆண்டின் முதல் பனை அறுவடை தொடங்கப்படுகிறது, அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் பனையறுவடை செய்த ஓலையை பெரியசாமி சன்னதியின் முன் வாழைமரம் கட்டுவதுபோல் கட்டி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவேண்டிக் கொள்கிறார்கள். மேலும் அன்று கோவிலில் பொங்கல் வைத்த பின்பு பொங்கல் வைத்ததை ஊருக்கு அறிவிக்கிறார்கள் அதன் பின்புதான் ஊரில் எல்லோரும் பொங்கல் வைக்கிறர்கள். கோவிலில் பொங்கல் வைக்கும் முன்பு ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை