அருள்மிகு ஆத்திசாமி பாதம்


உடல் நிலை, மனநிலை ,ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லாமல் இருந்தால் அவற்றை சரி செய்ய, ஆத்தி சன்னதி பூஜை நேரத்தில் கோழி முட்டை ஒன்று வாங்கி அண்ணாவியிடம் (பூசாரியிடம்) கொடுத்தால், அவர் அதை நம் தலையை சுற்றி தலைமீது வைத்து மந்திரங்கள் உச்சரித்து அந்த முட்டையை ஆத்திசாமி பாதத்தில் ஒப்படைத்து விடுவார். பின்பு நமது குறைகளை ஆத்திசாமி தீர்த்து விடுகிறார். இது நமது கோவிலில் காலம்காலமாக நடந்து வருகிறது, மக்கள் குறை நீங்கபெறுகிறார்கள்.
ஆத்தி சுவாமியின் தோற்றம் இடது கையில் கதையுடனும், வலது கரத்தில் வீச்சரிவாளுடனும் ( வீச்சு + அரிவாள் )

அருள்மிகு அனந்தம்மாள்


அருள்மிகு திருப்புளி ஆழ்வார்


பனையறுப்பு பொங்கல்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி நடப்பு ஆண்டின் முதல் பனை அறுவடை தொடங்கப்படுகிறது, அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் பனையறுவடை செய்த ஓலையை பெரியசாமி சன்னதியின் முன் வாழைமரம் கட்டுவதுபோல் கட்டி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவேண்டிக் கொள்கிறார்கள். மேலும் அன்று கோவிலில் பொங்கல் வைத்த பின்பு பொங்கல் வைத்ததை ஊருக்கு அறிவிக்கிறார்கள் அதன் பின்புதான் ஊரில் எல்லோரும் பொங்கல் வைக்கிறர்கள். கோவிலில் பொங்கல் வைக்கும் முன்பு ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை 

சாமான்கள் பாதுகாப்பு அறை


பக்தர்களின் வசதிக்காக புதியதாக சாமான்கள் பாதுகாப்பு அறை ஒன்று கோவில் அலுவலகத்தின் முன்பு தொடங்கப்பட்டுள்ளது. 

பவுர்ணமி பூஜை















 பவுர்ணமி பூஜையன்று சுவாமிகள் அலங்காரம்

புதிய உருவம்


வடக்கு வாசல் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மண்டபத்தில் நமது குல தெய்வங்களுக்கு புதியதாக உருவம் கொடுத்துள்ளார்கள்   

ஆத்தி பணிவிடை

முறையாக விரதமிருந்து பணிவிடை செய்பவர்கள்   ஆத்தி பணிவிடையின் போது  ஆத்திக்கு பெரியசாமியிடம் முத்திரை வைத்து பாதப்பால் கொடுக்கிறார்கள், அதன் பின்பு ஆத்தி இந்த கல் தொட்டியில் கலக்கி வைத்துள்ள மஞ்சள் நீரில் வந்து  விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறது.

சோலையப்ப சுவாமி சமாதி


             -:அருள்மிகு சோலையப்ப சுவாமி சமாதியின் தோற்றம்:-                                    செட்டியாபத்து  ஐந்துவீட்டு சுவாமி  கோயிலில் உள்ளது போன்றே, 'எப்போதும் வென்றான்''  ஊரில் உள்ள அருள் மிகு பெரியசாமியின் சீடரான 'சோலையப்பசாமி'களின் சமாதி ஆலயத்தில் திருமணி இடுவது மற்றும் பூஜை முறைகள் யாவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்
 திருவிளக்கு


 கருவறை வாசல்
 சன்னதி நுழைவு வாசல் 


 கருவறையின் முன்புறமுள்ள மண்டபம்








 சோலையப்ப சுவாமிகள் திருக்கோயில் நுழைவு வாசல்
பின்புற வாசல்

அருள்மிகு அனுமன்

      ராமா ! ராமா !! ராமா !!! என்றவுடன் முதலில் உதவிக்கு வருபவன் அனுமன்,
                                    ஜெய் ஆஞ்சநேயா !!!

திருப்புளிஆழ்வார்

    ஆழ்வார் திருநகரியில் உள்ள  திருப்புளி ஆழ்வார் சன்னதியை பார்வையிட இணைப்பை கிளிக் செய்யவும்  http://rightplus.

Sri Vayanapprumaal

              இக் கோயிலில் வயணப்பெருமாள்,  பக்தர்களின் பாவ  புண்ணிய கணக்குகளை கணக்கிடும் கணக்குபிள்ளையாக செயல்படுகிறார். நேர்த்திகடன் செலுத்த தவறி பாக்கி இருந்தாலும் வசூலித்து விடுவார், அதுபோல் நியாயமான வேண்டுகோள் வைப்பவர்களுக்கு காரியம் உடனடியாக நடைபெறவும் செய்திடுவார். இவரின் கணக்கிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது என்கிறார்கள் அனுபவசாலிகள். அதனால் இவரை பக்தர்கள் கணக்குபிள்ளை என்றும் அழைக்கிறார்கள்.  

Sri Periyapratti Chetiyapathu,