Hanumaan


அனுமன் சன்னதி மண்டபத்தின் தெற்கு பக்க தோற்றம் 

Sri Thiruppuli Aalvaar

பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வரும் நிலையில் எம் பெருமான் நாராயணன் பருந்து வாகனத்தின் மீது அமர்ந்து பறந்த வண்ணம் உள்ளார். இவர் இத் திருத்தலத்தில் திருப்புளி ஆழ்வாராக திருநாமம் பெற்று விளங்குகிறார், இது வேறு எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாகும் .( நாம் தான் அழைக்க வேண்டும் அவனே கதி என்று )

Aathiswamy (ஆத்திசுவாமி)

ஆத்தி சுவாமியின் அருள்மிகு தோற்றம்

Sri Aathiswamy

இக்கோவில் பக்தர்கள் தங்களின் இல்லத்தில் நடைபெறும் விசேசங்களுக்கு முதலில் ஐந்து வீட்டு தெய்வங்கள் அனைத்திற்க்கும்  அழைப்பிதழ் வைத்து அழைத்த  பின்புதான் மற்றவர்களை அழைக்கின்றனர் 

Aathi Swamy Sannathi



ஆத்தி சுவாமி சன்னதி வாசலும், வாசல் கதவுகளில் கலை நயம் மிகுந்த வேலைபாடுகளும்

Sri Vayanapperumaal Sannathi


வயனப்பெருமாள்  சன்னதி மண்டபத்தின் முகப்பு  தோற்றம்

Palliyarai Mandabavam

இந்த மண்டபவம் ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாச்சல சுவாமி  அவர்களின் தாய் தந்தையரால் குழந்தை வரம் கிடைத்ததற்காக கட்டிக் கொடுக்கப்பட்டது 

விளக்கு


கல்லினால் செய்த குத்துவிளக்கு

Sri Vayanapprumaal


முஸ்லிம் மசூதி போல் அமைந்துள்ள வயனப்பெருமாள் சன்னதி மேல் கூரை 

Periyapratti Ambal



குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் செலுத்தி உள்ள வளையல் காணிக்கைகள் 

Arulmiku Vealandi Swamikal Madam



கிழக்கு வாயில்புறத்தின் முன் அமைந்துள்ள வேலாண்டி சுவாமி மடம்  

Arulmiku Periyapratti

மதுரை மீனாட்சியம்மன் இத் திருத்தலத்தில் ஸ்ரீ பெரியபிராட்டியாக அருள் புரிவதாக கருதப்படுகிறது .
   குழந்தை பேறு இல்லாதவர்கள்,குழந்தை வரம் வேண்டி அம்மனை வழிபட்டு  அருள்  பெற்று  செல்கிறார்கள் ,பின்பு குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு வளையல்கள் காணிக்கையாக படைக்கிறார்கள்

Aathiswamy Kovil

                                          -: ஆன்மா உயிர்  விளக்கம் :-
                                            
    ஓர் அறிவு உள்ள மண்ணுக்கு உயிர் உண்டு , இரண்டு அறிவு உள்ள மரம் செடி கொடிகளுக்கு உயிர் உண்டு,   மூன்று   அறிவு   உள்ள    ஊர்ந்து செல்லும் ஜந்துக்களுக்கு உயிர் உண்டு, நாலறிவு கொண்ட மிருகங்களுக்கு உயிர் உண்டு,   ஐந்தறிவு   கொண்ட பறவைகளுக்கு   உயிர்   உண்டு,   ஆனால், அவைகளுக்கு, ஆன்மா இல்லை,  ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டும்தான் ஆன்மா உண்டு.
             மண்ணை தோண்டினால், மரத்தை வெட்டினால் ,மீனை   பிடித்தால், ஆடுகளை வெட்டினால் கொலை இல்லை,காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை ,மருத்துவர் ஊசி போட்டால் கிருமிகள் சாகும் ,விவசாயி  பயிர்களில் பூச்சி மருந்து அடித்தால் பூச்சிகள் சாகும் அதனால் , இவர்கள்  எல்லாம் கொலையாளிகளா  இல்லையே,  காரணம் இவைகளுக்கு ஆன்மா இல்லை,
 எனவே ஆலயங்களில் ஆடு ,கோழி ,ஆத்தி( பன்றி) இவைகளை படைப்பது பலியாகாது ,ஆண்டவன் விரும்பும் பொருள்கள்தான் ,இதில் தவறு ஒன்றுமில்லை , என்பது  பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami

-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:-



திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த ராமசாமி நாடார் , சிவனைந்த அம்மாள் தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என வருந்தி ஆத்திசுவாமி கோவிலில் விரதம் இருந்தனர். .   விரதமிருந்த தம்பதியரிடம் திருமணியும், தீர்த்தமும் கொடுத்து விரைவில் உங்களுக்கு ஆண்மகன் பிறப்பான், அவனுக்கு அருணாசலம் என பெயர் சூட்டுமாறும், அந்த குழந்தையின் வாழ்வு பற்றியும் அருளினார் ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் இருந்த தவத்திரு வேலாண்டிசுவாமிகள், அதன் பயனாய் பிறந்த குழந்தைதான் ஆடி அமாவாசை அன்று எரலில் சிறப்பாக கொண்டாடப்படும்  ஏரல் சேர்மன் அருணாச்சல  சுவாமிகள்,  அதன் நினைவாக,  ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடார் கட்டிகொடுத்ததுதான், ஆத்திசுவாமி கோவிலில் இப்பொழுது உள்ள பள்ளியறை  கட்டில்  மண்டபம். இங்கு பணிவிடை செய்பவர்களால் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் சந்நியசிகளில் ஒருவர்தான் வேலாண்டி சுவாமிகள் ,அவர் சமாதியான இடம்தான் கோவில் கோட்டை சுவருக்கு வெளியில்  கிழக்கு புறம் உள்ள வேலாண்டி சுவாமிகள் மடம்.



Poojai

  இக் கோவிலில் பூஜையின் போது மேளம், தாளம், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதில்லை,  மந்திரங்கள் ஓதுவதில்லை          மவுனமாக நடக்கிறது, ஆனால் ஆலயத்தின் மணி மட்டுமே ஒலிக்கிறது, திருவிழாவின் போது சாமி ஊர்வலம் இல்லை, இங்கு சக்தி வழிபாடு தொன்று தொட்டு நடக்கிறது, எனவே பெண்களுக்கு சிறப்பு உரிமை வழங்கப்படுகிறது, பூஜை பொருள்களை பெண்கள் தொட்டு வணங்கிய பிறகு தான் சுவாமிக்கு படைக்கபடுகிறது .

Thai Thiruvilaa

                                                     ​ -:தை திருவிழா:- 
                                          
  அருள் மிகு வயனப்பெருமாள்,  அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையாக தை மாதம் 5 ம் தேதி தொடங்கி முதல் மூன்று நாட்கள் தை பூஜை திருவிழா நடைபெறுகிறது

Chitthirai Thiruvilaa

                                                 சித்திரை திருவிழா
                                    
அருள் மிகு பெரியசுவாமி,  ஆத்திசுவாமி,  பெரியபிராட்டி,  திருப்புளி ஆழ்வார் கோவில் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுகள் தோறும் சித்திரை   18 ம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரை  பூஜை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது

பக்தர்களின் கவனத்திற்கு அறிந்து கொள்ளுங்கள்

         மேக்கட்டி  பூஜை நடை பெறும் நாட்களான தை 5 ம் தேதியும், சித்திரை மாதம் 18 ம் தேதியும் காதுகுத்து , முடி காணிக்கை அனுமதிக்கப்படுவதில்லை , பணிவிடைகள் தை 5 ம் தேதியும்,சித்திரை 16 ,17 ,18      ம் தேதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை, சித்திரை 23 ம் தேதி அன்னமுத்திரி பூஜை  அன்று மாலை 5  மணிக்கு மேல் தான் பணிவிடை அனுமதிக்கப்படுகிறது , தமிழ் மாத கடைசி வெள்ளி கிழமைகளிலும் .திரு கார்த்திகை , தை முதல் தேதி அன்றும் பணிவிடை  கிடையாது ,மேற்படி நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பணிவிடைகள் அனுமதிக்கப்படுகிறது

திருமணி Thirumani

இத் திருக்கோவில்லில்  பிரசாதமாக வழங்கப்படும் திருமணி சுவாமி அருளால் மிக சக்தி வாய்ந்ததாகவும், உயர்வானதாகவும் விளங்குகிறது, இது வெள்ளை நிற மன்கட்டியை இடித்து பொடியாக்கி தண்ணீர் விட்டு பிசைந்து உருட்டி நன்கு வெயிலில் காயவைத்து ''திருமணி'' தயாரிக்கப்படுகிறது 
 இதை  பக்தர்கள் நெற்றியில் பொட்டுஆகவும் ,மொட்டை எடுத்தபின் தலையில் பூசிக்கொள்ளவும், வியாதி உள்ளவர்கள் தண்ணிரில் கலந்து குடித்தும்   குணமடைகிறார்கள்,  பூஜையின் போது பூசாரியால் பக்தர்களின் நெற்றியில் பொட்டு இடவும் பயண்படுத்துகிறார்கள், திருமணியின்  மகிமையினால் பலனடைவதால்  பக்தர்கள் தங்கள் குழந்தைக்கு திருமணி என்று பெயர் சூட்டுகிறார்கள் ,இங்கு குங்குமம் ,திருநீறு வழக்கத்தில் இல்லை

ஆத்தி மரம் Aathi Tree

                                              ஆத்தி மரத்தின் மகிமை 
                                     
தீராத வியாதி உள்ளவர்கள் இத் திருத்தலத்தில் தங்கி, ஆத்திமர இலைகளை  அரைத்து தண்ணிரில் கலந்து குடித்து,ஆத்திசுவாமி  அருள் பெற்று குணமாகிச் செல்வது நடைபெறுகிறது ....