கண்டார் பெரியசாமியை


கண்டார் பெரியசாமி நடந்து வர கண்டார்,

பெரியசாமி நடந்து வரும்போது,
தலைக்கு மேலே வேஷ்டி நிழலாய் பறக்குதாம்!

வேஷ்டியின் நிழலில், வெயிலுமில்லை வெப்பமுமில்லை,
குளு காற்றும், மன அமைதியும்!

நடந்தாரே பெரியசாமி, நடந்தாரே!
செட்டியாபத்து நோக்கி நடந்தாரே!

வேஷ்டியின் நிழல் அவரைத் தொடர,
தெய்வ சக்தி கூடவே வர!
சோலையப்பர் கண்டார், பரவசமடைந்தார்,
பெரியசாமியின் மகிமையை உணர்ந்தார்!

துண்டு வேஷ்டியல்ல அது, தெய்வீக சக்தி,
அவர் மேல் பொழியும் அருட்காட்சி!

பெரியசாமியின் நடையில் பேரொளி,
நிழலாய் வரும் வேஷ்டியில் பெருஞ்சக்தி!

இப்படி ஒரு காட்சி கண்டார்,
பேரின்பத்தில் திளைத்தார்!

 பின் தொடர்ந்தார் பெரியசாமியை பின் தொடர்ந்தார் சோலையப்பர் தானே!!!
       ஆத்தியப்பன் S

கருணை

உன் கவலைதான் என்ன? என்னிடம் கூறிவிடு நானே உனது குரு; என்னையே நினை; என் நாமத்தையே நினை, என்னை வணங்கி என்னிடம்  சரணடை அது போதும் உனக்கு.
நீ எதற்கும் பயப்படாதே. நீ ஏன் கவலைபடுகிறாய்? என்னை நீ தஞ்சமடைந்து விட்டாயல்லவா! நான் பார்த்து கொள்கிறேன்.இனி எதற்கும் நீ பயப்பட தேவைஇல்லை. உனது மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு. இவ்வுலக வாழ்க்கையில் உன் கையில் ஏதுமில்லை. 
எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன் என்ற மனோபாவத்தை ஏற்படுத்திகொள் . எதிலும் அவசரபடாதே பொறுமையாய் இரு. என் மீது உன் பாரத்தை இறக்கு, நான் சுமக்கிறேன. என் மீது முழு நம்பிக்கை வைத்து நீ செய்யும் அனைத்து செயல்களுக்கும் என்னை பொறுப்பாளியாக்கு உன் செயலை உன் விருப்பபடி நான் செய்து முடிக்கிறேன்.
நம்பிக்கை எனும் அச்சாணியாக என்னை உன் மனதில் நிறுத்து. 
பொறுமையாய் வாழ்ந்து வா .
உன்னை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் நான் சேர்க்கிறேன்.என்னை சரணடைந்து உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டு என் மீது முழு நம்பிக்கை வை உன் பாரம் மட்டும் அல்ல உன் பாவத்தையும் நான் சுமக்க தயாராக இருக்கிறேன். 
*என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை…*