தசப்பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தசப்பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐந்து வீட்டு சுவாமி கோவில் தசப்பதிகம்

        ~~காப்பு~~

பொன்மலர்ச் சேவடி போற்றித் துதிப்போம்
வன்மலி பாவங்கள் மாற்றி அருள்வாய்
அமல ஞானம் நிலவப் புரிவாய்
இம்மலர்த் தசகம் இனிதுடன் பாடவே.
 
       ~~தசப்பதிகம்~~

1.பெரியசாமி என்றொரு நாமம், உலகின் முதல் தெய்வம் நீ!
உறவான எங்கள் குலத்தின் காவலனே, ஓயாமல் அருள்வாய் நீயே!

2.வயண பெருமாள் எங்கள் தெய்வமே, இருண்ட வாழ்வின் ஒளி நீ!
இருவினைகள் தீர்க்கும் இறையே, இனிக்கும் வாழ்வருள்வாய் நீயே!

3.அனந்தம்மாள் தேவியே தாயே, மூவுலகின் துணையுமாய்!
முழுமையாய் வந்தனை செய்தோம், முக்தி அருள்வாய் நீயே!

4.ஆத்திசாமி ஆண்டவனே, நாற்கோண நாயகா நீ!
நற்பதங்கள் வழங்கிடுவாய், நலமெல்லாம் அருள்வாய் நீயே!

5. திருபுளி ஆழ்வார் ஐயா, ஐம்புலனும் அடக்கியவன்!
ஐயம் நீக்கி அடியேனுக்கு, ஆனந்தம் அருள்வாய் நீயே!

6.பெரியபிராட்டி தாயே, ஆறெழுச்சி வடிவம் நீ!
ஆதரிக்கும் அன்புத் தாயே, அள்ளி அருள்வாய் நீயே!

7.ஏழு ஜென்மம் தொடர்ந்தாலும், எங்கள் ஏழு ஏழு தலைமுறைக்கும்!
ஏகாந்த சக்தியாய் இருந்து, என்றும் காத்திடுவாய் நீயே!

8.எட்டுதிக்கும் புகழ் பரவ, எங்கள் ஐந்து வீட்டு சுவாமிகளே!
ஏற்றங்கள் தந்து எமை காக்க, எப்போதும் துணை இருப்பீர் நீரே!

9.ஒன்பது கோள்களும் போற்றும், உன்னத தெய்வங்களே!
ஒளியாய் வாழ்வு சிறக்க, ஒளியாய் வருவீர் நீரே!

10.பற்றற்ற நிலையறிந்தோம், பக்தி மனம் கொண்டோம்!
பாதுகாக்கும் தெய்வங்களே, பரமபதம் அளிப்பீரே!!! 
           ஆத்தியப்பன் S