திருப்பள்ளி எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பள்ளி எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருப்பள்ளி எழுச்சி

காலை மலர்ந்தது, கதிரவன் வந்தான்,
பெரியசாமியே எழுந்தருள்வீரே!

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி,
சிங்கார ரூபரே, எழுந்தருள்வீரே!


பக்தர்கள் யாவரும் கூடியே வந்தோம்,
பள்ளி கொண்ட பரம்பொருளே!
மங்கள இசை எத்திக்கும் முழங்க,
மகிழ்வுடன் எழுந்தருள்வீரே!


வெள்ளிப் பணித்துளிகள் புல்லினில் மின்ன,
விழி மூடிய நித்திரையை கலைப்பீரே!
பறவையின் கீதங்கள் பதிகமாய் ஒலிக்க,
பரந்தாமனே, எழுந்தருள்வீரே!


தாமரை மலர்கள் செம்மையாய் மலர,
தரிசனம் தர எழுந்தருள்வீரே!
எங்களின் துயர்கள் தீர்க்க வேண்டி,
அருளுடன் எழுந்தருள்வீரே!



ஊரெலாம் உந்தன் புகழ் பாடியே நிற்க,
உள்ளம் கவர்ந்த உத்தமரே!அலங்காரம் பூண்டு,
அழகாய் எழுந்தருள்வீரே!


உறவுகள் நெஞ்சில் உறைந்திருப்பவரே,
திருமணி முகுந்தா எழுந்தருள்வீரே!
செல்வங்கள் யாவும் செழிக்க அருள்வீரே,
ஜெகத்குருவே எழுந்தருள்வீரே!


ஹரி ஓம் ராமானுஜாய! போற்றி! போற்றி!
பெரியசாமியே போற்றி! போற்றி!
மங்களம் உண்டாகுக! மங்களம் உண்டாகுக!

எல்லோரும் இன்புற்று வாழ அருள்வீரே! அருள்வீரே!
 ஆத்தியப்பன் S