பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொறுத்தருள வேண்டும

மனம் கொண்டதை மாற்றி கவி புனைந்தேன்
கற்றவரும் கர்வம் கொண்டவரும் குற்றம் 
கண்டால் பொருத்தருளல் புண்ணியமாகும்"

திருப்பள்ளி எழுச்சி


பெரியசாமிக்கு திருபள்ளியெழுச்சி

காலை மலர்ந்தது, கதிரவன் வந்தான்,
பெரியசாமியே எழுந்தருள்வீரே!

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி,
சிங்கார ரூபரே, எழுந்தருள்வீரே!


பக்தர்கள் யாவரும் கூடியே வந்தோம்,
பள்ளி கொள்ளும் பரம்பொருளே!
மங்கள இசை எத்திக்கும் முழங்க,
மகிழ்வுடன் எழுந்தருள்வீரே!


வெள்ளிப் பணித்துளிகள் புல்லினில் மின்ன,
விழி மூடிய நித்திரையை கலைப்பீரே!
பறவையின் கீதங்கள் பதிகமாய் ஒலிக்க,
பரந்தாமனே, எழுந்தருள்வீரே!


தாமரை மலர்கள் செம்மையாய் மலர,
தரிசனம் தர எழுந்தருள்வீரே!
எங்களின் துயர்கள் தீர்க்க வேண்டி,
அருளுடன் எழுந்தருள்வீரே!



ஊரெலாம் உந்தன் புகழ் பாடியே நிற்க,
உள்ளம் கவர்ந்த உத்தமரே!அலங்காரம் பூண்டு,
அழகாய் எழுந்தருள்வீரே!


உறவுகள் நெஞ்சில் உறைந்திருப்பவரே,
திருமணி முகுந்தா எழுந்தருள்வீரே!
செல்வங்கள் யாவும் செழிக்க அருள்வீரே,
ஜெகத்குருவே எழுந்தருள்வீரே!


ஹரி ஓம் ராமானுஜாய! போற்றி! போற்றி!
பெரியசாமியே போற்றி! போற்றி!
மங்களம் உண்டாகுக! மங்களம் உண்டாகுக!
எல்லோரும் இன்புற்று வாழ அருள்வீரே! அருள்வீரே!

பாடல்

எல்லா நலமும் எனக்கு அருளும் பெரிய சுவாமியே!
எங்கள் குல தெய்வமே, என் உயிரே!

என் மனதையுருக்கி உன்னிடம் சேர்த்தாயே,
எல்லாம் செய்ய வல்லானே!

கோவில் மணி ஓசையில் உன் குரல் கேட்டேன்,
தீப ஒளியில் உன் திருமேனி கண்டேன்!

என் கண்ணீர் உனக்கான பூக்கள்தானே,
காத்திருக்கிறேன் உன் கருணைப் பார்வைக்காவே!

பக்தர் குலம் காக்கும் தாயுருவே,
அடியவர்களின் துயர்துடைக்கும் அன்புருவே!

செட்டியாபத்தில் அமர்ந்திருக்கும் ஞான பதியே,
என் அகந்தையை அழித்து என்னை ஆட்கொள்வாயே!

வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உன் துணை இருக்க,
வாழ்க்கை வழியெல்லாம் வளமே!
எல்லாம் செய்ய வல்லானே,
என்னை ஆட்கொண்ட ஞானகுருவே,
குலம் காக்கும் குலதெய்வமே!