ஆத்திசாமி யார்?

                                             ஆத்திசாமி யார்?
      ஆத்திசாமியை பூதம் என்கிறார்களே சரியா?
ஆதியிலே இருந்த கோயில் அதுதான் என்றும் சொல்கிறார்களே!!! பெரியசாமிகளும் இந்த கோவிலை தான் வணங்கினார் என்றும் சொல்கிறார்களே உண்மையா? அப்படியானால், பெரியசாமிகள் பூதத்தை வணங்கினாரா!!! ஆனால், பெரியசாமிகளை கொல்வதற்கு மந்திரவாதி ஏவிய பூதம்தான் ஆத்திசாமி என்கிறார்களே!!! ஒரே குழப்பமாக உள்ளது. என்று, நமது கோவில் வரலாறு பற்றி சிந்தித்து குழப்பமாக இருக்கிறதா? அப்படியானால் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த
உண்மை என்னவென்றால் இந்து ஆன்மீக வரலாற்றில் சித்தர்களை அடக்கம் செய்த இடத்தில்தான் நாற்காலி வைத்திருப்பார்கள்.அதில் சித்தர் அமர்ந்து நமக்கு அருள் புரிவதாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. நமது கோவிலிலும் ஆத்திசாமி சன்னதியை நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும் ஆத்திசாமி நாற்காலியில் அமர்ந்து நமக்கு அருள் தருவதாக தான் வணங்கி வருகிறோம். பெரியசுவாமிகள் செட்டியாபத்துக்கு வரும் போது தற்போது உள்ள இடத்தில் இருந்த கோவிலும் ஆத்திசாமி கோவில்தான். அது அப்போதே சித்தர் கோவிலாக இருந்திருக்கும், அதனால்தான் பெரியசுவாமிகள் அதை வணங்கி வந்திருப்பார் ஆத்திசாமி பூதமாக அவரைக் கொல்வதற்கு வரும் போது அந்த இடத்தில் ஆத்திசாமியையும் நிலை நிறுத்தி இருப்பார். எனவே, அந்த இடத்தில் ஆத்திசாமிகளையும் அதற்கு முன்பு இருந்த சித்தரையும் ஒரு  சேரவே நாம் வணங்கி வருவதாக நான் கருதுகிறேன். இது பற்றி தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

பெரியசாமி போற்றி

1.ஐந்து வீட்டு தெய்வமே போற்றி!!!
2.பெரியசாமி தெய்வமே போற்றி!!!
3.அருள்புரிபவரே போற்றி!!! 
4.பிணிதீர்ப்பவரே போற்றி!!!                
5.அருள் தருபவரே போற்றி!!!                    
6.ஐயம் தீர்ப்பவரே போற்றி!!!             
7.இன்னல் தீர்ப்பவரே போற்றி!!!        
8.இடர்களை நீக்குபவரே போற்றி!!!              
9.இன்பம் தருபவரே போற்றி!!!    
10.எளியார்க்கு எளியவரே போற்றி!!!
11.நல்வழி காட்டுபவரே போற்றி!!!        
12.நலன்கள் சேர்ப்பவரே போற்றி!!!                  
13.பயம் போக்குபவரே போற்றி!!!                
14.பகை அழிப்பவரே போற்றி!!!          
15.செல்வம் பெருக்குபவரே போற்றி!!!              
16.சிறப்பு அருள்பவரே போற்றி!!!          
17.ஓங்கார நாதரே போற்றி!!!                          
18. ஐந்து வீட்டு சித்தரே போற்றி!!! போற்றி!!!