கோத்திரம்

கோத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட ரிஷியின் (முனிவரின்) நேரடி தந்தை வழி வாரிசுகளைக் குறிக்கும் அடையாளமாகும்.
​இதை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள சில முக்கியக் குறிப்புகள்:

​1. ஒரு ரிஷியின் குடும்பம்
​ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளின் வம்சாவளியினர்.  உதாரணமாக நாம் ஒருவருக்கு அதாவது "உத்ர மகரிஷி கோத்திரம்" என்றால், உத்ர மகரிஷியை தந்தையாக கொணட வழி பரம்பரையில் வந்தவர் என்று பொருள்.

​2. ரத்த உறவு (Biological Connection)
​கோத்திரம் என்பது அடிப்படையில் ஒரு "மரபணு வழித்தடம்" (Genetic Lineage).
​ஒரு தந்தைக்குப் பிறக்கும் மகன்களுக்கும், மகள்களுக்கும் அதே கோத்திரம்தான்.
​ஆனால், ஒரு பெண் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவர் கணவரின் கோத்திரத்திற்கு மாறிவிடுவார்.
​மகன்கள் மூலமாகவே அந்தக் கோத்திரம் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

​3. ஏன் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது?
​ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் "பங்காளி" அல்லது "சகோதர-சகோதரி" உறவுமுறை உடையவர்கள் எனக் கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒரே ரத்த ஓட்டம் அல்லது நெருங்கிய மரபணு (DNA) கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையே நம் முன்னோர்கள் "சகோதர உறவு" என்று தவிர்த்தார்கள்.

​4. ​கோத்திரம் என்பது ஒரு ரிஷியைக் குறித்தால். இது உங்கள் அடையாளத்தை இன்னும் துல்லியமாக உறுதிப்படுத்துகிறது.
​சுருக்கமாகச் சொன்னால்:
கோத்திரம் என்பது உங்களின் "ஆன்மீக மற்றும் உயிரியல் முகவரி". உங்கள் முன்னோர்களின் பெயரைக் காக்கும் ஒரு சங்கிலித் தொடர்.
 இது நமது குல தெய்வமான ஐந்து வீட்டு சுவாமிகள் வழிபாட்டில் இல்லை. நாம் பலரும் பல சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வணங்கி வருகிறோம் ஆகவே நாம் எந்த கோத்திரத்தையும் சார்ந்தவர்கள் இல்லை...

சுவாமி

ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் அரசாளும் பெரியசாமியே!

உள்ளம் உருகிடுதே உன் பேரைக் கேட்கையிலே!

உள்ளம் உருகிடுதே, உன் பேரைக் கேட்கையிலே!

அண்டினோர்க்கு அபயம் தரும் ஐயனே!
உந்தன் திருக்காட்சியில்
எந்தன் நெஞ்சம் நிறைகிறதே


சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

அன்பால் அணைக்கின்றாய், அருள்மழை பொழிகின்றாய்;

எம் குறை தீர்த்திடும் எங்கள் பெரியசாமி!

நானிலம் போற்றிடும் நாயகன் நீயே!

பலவழி கடந்து வந்த காரிய சித்தனே!

பக்தர்கள் துயர்தீர்க்கும் பரம்பொருளே!
 என்றென்றும் எம்மை காத்திடுவாயே!!!