பள்ளியறை காணிக்கை

அருள்மிகு பெரியசாமிகளின் பள்ளியறை கட்டில். திருமணதடை  விலகவும், இல்லறவாழ்க்கை சிறக்கவும் வேண்டிக்கொண்டு எண்ணம் நிறைவேறிய பின் பக்தர்கள் பள்ளியறை கட்டிலுக்கு போர்வை அல்லது ஜமுக்காளம் தலையனையை காணிக்கையாக செலுத்துகின்றனர்

மண்டபம்




தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்த பட்ட மண்டபம்

அருள்மிகு ஆத்திசாமி பாதம்


உடல் நிலை, மனநிலை ,ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லாமல் இருந்தால் அவற்றை சரி செய்ய, ஆத்தி சன்னதி பூஜை நேரத்தில் கோழி முட்டை ஒன்று வாங்கி அண்ணாவியிடம் (பூசாரியிடம்) கொடுத்தால், அவர் அதை நம் தலையை சுற்றி தலைமீது வைத்து மந்திரங்கள் உச்சரித்து அந்த முட்டையை ஆத்திசாமி பாதத்தில் ஒப்படைத்து விடுவார். பின்பு நமது குறைகளை ஆத்திசாமி தீர்த்து விடுகிறார். இது நமது கோவிலில் காலம்காலமாக நடந்து வருகிறது, மக்கள் குறை நீங்கபெறுகிறார்கள்.
ஆத்தி சுவாமியின் தோற்றம் இடது கையில் கதையுடனும், வலது கரத்தில் வீச்சரிவாளுடனும் ( வீச்சு + அரிவாள் )

அருள்மிகு அனந்தம்மாள்


அருள்மிகு திருப்புளி ஆழ்வார்


பனையறுப்பு பொங்கல்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி நடப்பு ஆண்டின் முதல் பனை அறுவடை தொடங்கப்படுகிறது, அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் பனையறுவடை செய்த ஓலையை பெரியசாமி சன்னதியின் முன் வாழைமரம் கட்டுவதுபோல் கட்டி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவேண்டிக் கொள்கிறார்கள். மேலும் அன்று கோவிலில் பொங்கல் வைத்த பின்பு பொங்கல் வைத்ததை ஊருக்கு அறிவிக்கிறார்கள் அதன் பின்புதான் ஊரில் எல்லோரும் பொங்கல் வைக்கிறர்கள். கோவிலில் பொங்கல் வைக்கும் முன்பு ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை 

சாமான்கள் பாதுகாப்பு அறை


பக்தர்களின் வசதிக்காக புதியதாக சாமான்கள் பாதுகாப்பு அறை ஒன்று கோவில் அலுவலகத்தின் முன்பு தொடங்கப்பட்டுள்ளது. 

கருடபத்து பாடல்

                                                        -----கருடப்பத்து-----

1. ஓம் பூரணனே பதினாறுதிங்கள் சேறும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும், காரணனே கருமுகில் பொன்மேனிசேருங் கருணைபெறு மஷ்டாட்சரங் கலந்து வாழும், வாரணனே லட்சுமியோடெட்டுஞ்சேரும், மதிமுகம்போல் நின்றிலங்கு மாயாநேயா ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே.

2. மந்திரமோ அஷ்டதித்து மெட்டுஞ் சேரும், வாழ்கிரக மொன்பதுமே வந்து சேரும், கந்திருவர் கணநாத ராசிவர்க்கம் கலைக்கியான நால்வேதங் கலந்து வாழும், நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித் துன் பாதம் நாளும் போற்ற, அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனேயேறி வந்தருள் செய்வாயே.

3. மூலமுதலோரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுந்து மொழியலாமோ, சீலமுதல் ஓம் - அங் - உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும், காலமுதல் ஓம்-அங்-உங்-மங்- றிங் கென்றே கருணைபெரு மிவ்வெழுத்து நீர்தானாகும். ஆலவிஷங்கை யேந்துங் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

4. நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராராவென்றும், சவ்வென்றும் ஓங்கார ரீங்காரமாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர் தானாகும். ஒவ்வொன்றும் ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித் துகந்து போற்ற, அவ்வென்று ரகுராமா கெருடன்மீதில் அன்புடனே யேறி வந்தருள் செய்வாயே.

5. உதிக்கின்ற சிவசொரூப முனக்கே யாகும் ஓம் - அவ்வும் - உவ்வுங்கிலியு மென்றே, பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில்விட்டே பச்சை முகில்மேனியனே பணிந்தே னுன்னை, விதிக்கிசைந்த மெய்பொருளே அரி கோவிந்தா, விளக்கொளி போல் மெய்த்தவமே விரும்பித்தாதா, அதற்கிசைந்த நடம்புரியும் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

6. வேதமுதலா யிருந்த சிங்கரூபம் விளங்குகின்ற விரணியனை வதையேசெய்தாய் பூதமுதலாம் பிறவும் புண்ணியநேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதைபுத்ரா, நாதமுதல் விந்துவா யுயிருக்கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வாத பிரமயாதவன் போல் நிறைந்திருக்கும் கருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

7. முக்கோண நாற்கோண மொழிந்தைங் கோணமுச்சுடரே யறுகோண மெண்கோணமாகும். சட்கோண நாற்பத்து மூன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகலசித்தும், இக்கோணமிது முதலாய் வகாரமட்டும் இறையவனாய்த் தானிருந்து ரட்சித்தருளும், அக்கோணமீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

8. பச்சை முகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவதாரமுண்டு, மச்சமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும், வாமனென்றும் ராமனென்றும் பவுத்தனென்றும், துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டவராய்த் தோன்றினாயுன்சொரூப மெல்லாம் அறிவாருண்டோ, அச்சந்தீர்த் தெனையாளக் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

9. வேதியனாய்த் தோன்றிவந்தாய் மாயலிக்கு விண்ணவர்க்காய், நரசிங்கரூபமாய்ச், சாதியிலே ராகவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து த்வந்திருந்தாய் தரணி வாழ்க, சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மை துஷ்டரையும் வதை செய்துலோகமாள்வாய், ஆதிமுதலோரெழுத்தே நீகெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

10. மாயவனே ரகுராமா அருகேவாவா வஞ்சனைகள் பறந்தோட நெஞ்சில் வாவா, காயாம்பூ நிறமுடனே கனவில்வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா, நாயகனே யென்னாவிலிருக்க வாவா நாள்தோறும் முன்பாதந் துதிக்க வாவா ஆயர்குலத்துதித்தவனே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

11. முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறத்தவனே ஜகநாதா முன்னே வா வா எப்பொழுதுந் துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப் பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா, ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா, ஓம் நமோ நாராயணா வுகந்து வாவா, அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

12. துளபமணிமார் பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்பொருளே வரத்தைத்தாதா களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கம்சனை வென்றவனே கருணை தாதா, பழம் பொருளே சிவ சோதி பாக்கியந்தாதா பத்தி முத்தி சித்தி செய்யவுன் பாதந்தாதா, அளவில்லா மெய்ப்பொருளே கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே.

கருடப் பத்து முற்றிற்று.