பெரியசாமி சன்னதி கல் மண்டப திருப்பணி

17.6.25 மற்றும் 18.6.25 தேதிகளில் நடைபெறும் பெரியசாமி சன்னதியின் நுழைவு வாசல் கல் மண்டபத்திற்கு அடித்தளம் அமைக்கும் வேலை 

பெரியசாமியே போற்றி

1.ஐந்து வீட்டு தெய்வமே போற்றி!!!
2.பெரியசாமி தெய்வமே போற்றி!!!
3.அருள்புரிபவரே போற்றி!!! 
4.பிணிதீர்ப்பவரே போற்றி!!! 
5.ஆபத்பாந்தவரே போற்றி!!!
6. அருள் தருபவரே போற்றி!!!
7.ஐயம் தீர்ப்பவரே போற்றி!!!
8.இன்னல் தீர்ப்பவரே போற்றி!!!
9.இடர்களை நீக்குபவரே போற்றி!!!
9.இன்பம் தருபவரே போற்றி!
10.எளியார்க்கு எளியவரே போற்றி!!!
11.நல்வழி காட்டுபவரே போற்றி!!!
12.நலன்கள் சேர்ப்பவரே போற்றி!
13.பயம் போக்குபவரே போற்றி!!!
14.பகை அழிப்பவரே போற்றி!
15.செல்வம் பெருக்குபவரே போற்றி!!!
16.சிறப்பு அருள்பவரே போற்றி!!!
17.ஓங்கார நாதரே போற்றி!
18. ஐந்து வீட்டு சித்தரே போற்றி!!! போற்றி!!!
                                          ஆத்தியப்பன் S

காத்தருளும் சோலையப்பா!!!

எப்போதும் வென்றான் சோலையப்ப சுவாமியே!!!
அழகு தாளாத திருமேனி
அருள் பொங்கும் பொன்னழகே!!!
மனதில் நிறைந்த சோலையப்பா!!!
எங்களை மகிழ்வுடன் காத்திடும் இறைவா!!!
எப்போதும் வென்றான் நீயே!!!
எவர்க்கும் அருளும் நாயகனே,
அடியவர் துயரம் தீர்ப்பவனே,
அன்பே உருவான தெய்வமே!!!
நின் திருவடி போற்றிப் பணிகின்றோம்
திருப்புகழ் பாடித் துதிக்கின்றோம்
எண்ணங்கள் ஈடேறவே
என்றும் துணை நீயே!!!
      ஆத்தியப்பன் S

காக்கும் தெய்வமே


எங்களை காக்கும் வயண பெருமாளே,
வேண்டினால் அருள்வாய் வேந்தனே!
துயரங்கள் தீர்ப்பாய் தூயவனே,
நம்பினோர் வாழ்வை நலமாக்குவாய்!

எங்களை காக்கும் வயண பெருமாளே,
மனதில் நின்றாய் மாலவனே!
உந்தன் நாமமே உயிர்மூச்சன்றோ,
திருவருள் பொழிவாய் தெய்வமே!

எங்களை காக்கும் வயண பெருமாளே,
உலகைக் காக்கும் உத்தமனே!
உன் பாதமே சரணமென்று,
பக்தர்களைக் காப்பாய் பரந்தாமா! 
           ஆத்தியப்பன் S

ஐந்து வீட்டு சுவாமி கோவில் தசப்பதிகம்

        ~~காப்பு~~

பொன்மலர்ச் சேவடி போற்றித் துதிப்போம்
வன்மலி பாவங்கள் மாற்றி அருள்வாய்
அமல ஞானம் நிலவப் புரிவாய்
இம்மலர்த் தசகம் இனிதுடன் பாடவே.
 
       ~~தசப்பதிகம்~~

1.பெரியசாமி என்றொரு நாமம், உலகின் முதல் தெய்வம் நீ!
உறவான எங்கள் குலத்தின் காவலனே, ஓயாமல் அருள்வாய் நீயே!

2.வயண பெருமாள் எங்கள் தெய்வமே, இருண்ட வாழ்வின் ஒளி நீ!
இருவினைகள் தீர்க்கும் இறையே, இனிக்கும் வாழ்வருள்வாய் நீயே!

3.அனந்தம்மாள் தேவியே தாயே, மூவுலகின் துணையுமாய்!
முழுமையாய் வந்தனை செய்தோம், முக்தி அருள்வாய் நீயே!

4.ஆத்திசாமி ஆண்டவனே, நாற்கோண நாயகா நீ!
நற்பதங்கள் வழங்கிடுவாய், நலமெல்லாம் அருள்வாய் நீயே!

5. திருபுளி ஆழ்வார் ஐயா, ஐம்புலனும் அடக்கியவன்!
ஐயம் நீக்கி அடியேனுக்கு, ஆனந்தம் அருள்வாய் நீயே!

6.பெரியபிராட்டி தாயே, ஆறெழுச்சி வடிவம் நீ!
ஆதரிக்கும் அன்புத் தாயே, அள்ளி அருள்வாய் நீயே!

7.ஏழு ஜென்மம் தொடர்ந்தாலும், எங்கள் ஏழு ஏழு தலைமுறைக்கும்!
ஏகாந்த சக்தியாய் இருந்து, என்றும் காத்திடுவாய் நீயே!

8.எட்டுதிக்கும் புகழ் பரவ, எங்கள் ஐந்து வீட்டு சுவாமிகளே!
ஏற்றங்கள் தந்து எமை காக்க, எப்போதும் துணை இருப்பீர் நீரே!

9.ஒன்பது கோள்களும் போற்றும், உன்னத தெய்வங்களே!
ஒளியாய் வாழ்வு சிறக்க, ஒளியாய் வருவீர் நீரே!

10.பற்றற்ற நிலையறிந்தோம், பக்தி மனம் கொண்டோம்!
பாதுகாக்கும் தெய்வங்களே, பரமபதம் அளிப்பீரே!!! 
           ஆத்தியப்பன் S

ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி


 1.அருள் தரும் பெரியசாமியே போற்றி!!!
 2. அருள் தரும் வயணப்பெருமாளே போற்றி!!!
 3. அருள் தரும் அனந்தம்மாளே போற்றி!!!
 4. அருள் தரும் ஆத்தியப்ப சுவாமியே போற்றி!!!
 5. அருள் தரும் திருபுளி ஆழ்வாரே போற்றி!!!
 6. அருள் தரும் பெரியபிராட்டியே போற்றி!!!
 7. எங்கள் குலம் காக்கும் குரு பெரியசாமியே போற்றி!!!
8.கருணைமிகு வயணப்பெருமாளே போற்றி!!!
 9. ஆனந்தம் தரும் அனந்தம்மாளே போற்றி!!!
 10. நீதி வழங்கும் ஆத்தியப்ப சாமியே போற்றி!!!
11.நற்கதி அருளும் திருபுளி ஆழ்வாரே போற்றி!!!
 12.மங்களம் அருளும் பெரியபிராட்டியே போற்றி!!!
 13.ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி!!!
 14.குறை தீர்க்கும் தெய்வங்களே போற்றி!!!
15.துன்பம் துடைக்கும் தெய்வங்களே போற்றி!!!
16. உலகை காக்கும் தெய்வங்களே போற்றி!!!
17.செட்டியாபத்து தேசத்துக் காவலர்களே போற்றி!!!
18.பக்தர் துயர் தீர்க்கும் பரம்பொருளே போற்றி!!! போற்றி!!!
              ஆத்தியப்பன் S

அருளாளனே!!!

ஆத்தியப்ப சுவாமியே!!!
ஆதிக்கம் செய்யும் ஐயனே!!!
ஐந்து வீட்டுப் பெருமானே!!!
ஆத்தி மரத்து அருளாளனே!!!
ஆத்தியப்பனே!!! அருள் செய்வாய்!!!
வினை தீர்க்கும் ஜோதியே!!!
சித்தர்கள் போற்றும் 
ஆத்தியப்பனே!!! அருள் செய்வாய்!!!
பக்தர்களின் துயர் துடைப்பவனே!!!
பகை நீக்கும் பரம்பொருளே!!!
சக்தி வடிவான சாமியே!!!
ஆத்தியப்பனே, அருள் செய்வாய்!!!
            ஆத்தியப்பன் S