உள்ளம் உருகிடுதே உன் பேரைக் கேட்கையிலே!
உள்ளம் உருகிடுதே, உன் பேரைக் கேட்கையிலே!
அண்டினோர்க்கு அபயம் தரும் ஐயனே!
உந்தன் திருக்காட்சியில்
எந்தன் நெஞ்சம் நிறைகிறதே
சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;
சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;
அன்பால் அணைக்கின்றாய், அருள்மழை பொழிகின்றாய்;
எம் குறை தீர்த்திடும் எங்கள் பெரியசாமி!
நானிலம் போற்றிடும் நாயகன் நீயே!
பலவழி கடந்து வந்த காரிய சித்தனே!
பக்தர்கள் துயர்தீர்க்கும் பரம்பொருளே!
என்றென்றும் எம்மை காத்திடுவாயே!!!