அண்டமெலாம்

அண்டமெலாம் ஆளும் சக்தி, அனல் மூச்சில் உறைந்ததே!!!

பிண்டத்துள் கோடி ரகசியம், பிரம்ம நாடி சிறந்ததே!!!

கண்டறிய மூல நாடி, கனல் எழுப்பும் குண்டலி!!!

விண்டதெல்லாம் பொய்மையடா, விழி மூடி உணர்ந்திடு!!!

ஏழாதார சக்கரம், ஆதிசக்தி நிலையமே!!!

ஊறும் அமுதம் உயர, உயிர் நாடி துணையே!!!

பேறும் பெருமை வேண்டாமே, பேரின்ப சுகந்தனை!!!

தேறும் ஞானம் சித்தியடா, தெய்வமாய் ஒளிர்ந்திடு!!! 

கருத்துகள் இல்லை: