Thai Thiruvilaa

                                                     ​ -:தை திருவிழா:- 
                                          
  அருள் மிகு வயனப்பெருமாள்,  அனந்தம்மாள் கோவில்கள் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையாக தை மாதம் 5 ம் தேதி தொடங்கி முதல் மூன்று நாட்கள் தை பூஜை திருவிழா நடைபெறுகிறது

Chitthirai Thiruvilaa

                                                 சித்திரை திருவிழா
                                    
அருள் மிகு பெரியசுவாமி,  ஆத்திசுவாமி,  பெரியபிராட்டி,  திருப்புளி ஆழ்வார் கோவில் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுகள் தோறும் சித்திரை   18 ம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரை  பூஜை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது

பக்தர்களின் கவனத்திற்கு அறிந்து கொள்ளுங்கள்

         மேக்கட்டி  பூஜை நடை பெறும் நாட்களான தை 5 ம் தேதியும், சித்திரை மாதம் 18 ம் தேதியும் காதுகுத்து , முடி காணிக்கை அனுமதிக்கப்படுவதில்லை , பணிவிடைகள் தை 5 ம் தேதியும்,சித்திரை 16 ,17 ,18      ம் தேதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை, சித்திரை 23 ம் தேதி அன்னமுத்திரி பூஜை  அன்று மாலை 5  மணிக்கு மேல் தான் பணிவிடை அனுமதிக்கப்படுகிறது , தமிழ் மாத கடைசி வெள்ளி கிழமைகளிலும் .திரு கார்த்திகை , தை முதல் தேதி அன்றும் பணிவிடை  கிடையாது ,மேற்படி நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பணிவிடைகள் அனுமதிக்கப்படுகிறது

திருமணி Thirumani

இத் திருக்கோவில்லில்  பிரசாதமாக வழங்கப்படும் திருமணி சுவாமி அருளால் மிக சக்தி வாய்ந்ததாகவும், உயர்வானதாகவும் விளங்குகிறது, இது வெள்ளை நிற மன்கட்டியை இடித்து பொடியாக்கி தண்ணீர் விட்டு பிசைந்து உருட்டி நன்கு வெயிலில் காயவைத்து ''திருமணி'' தயாரிக்கப்படுகிறது 
 இதை  பக்தர்கள் நெற்றியில் பொட்டுஆகவும் ,மொட்டை எடுத்தபின் தலையில் பூசிக்கொள்ளவும், வியாதி உள்ளவர்கள் தண்ணிரில் கலந்து குடித்தும்   குணமடைகிறார்கள்,  பூஜையின் போது பூசாரியால் பக்தர்களின் நெற்றியில் பொட்டு இடவும் பயண்படுத்துகிறார்கள், திருமணியின்  மகிமையினால் பலனடைவதால்  பக்தர்கள் தங்கள் குழந்தைக்கு திருமணி என்று பெயர் சூட்டுகிறார்கள் ,இங்கு குங்குமம் ,திருநீறு வழக்கத்தில் இல்லை

ஆத்தி மரம் Aathi Tree

                                              ஆத்தி மரத்தின் மகிமை 
                                     
தீராத வியாதி உள்ளவர்கள் இத் திருத்தலத்தில் தங்கி, ஆத்திமர இலைகளை  அரைத்து தண்ணிரில் கலந்து குடித்து,ஆத்திசுவாமி  அருள் பெற்று குணமாகிச் செல்வது நடைபெறுகிறது ....

அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

    அன்பர்கள் இந்த வலை பதிவை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை, இந்த வலைபதிவில் கருத்துரைகள் என்பதில் பதிவு செய்ய வேண்டுகிறோம் , அது இந்த வலை பதிவின் தரத்தை வளர்க்க உதவும், மேலும் ஐந்து வீட்டு சுவாமிகளை குலதெய்வமாக கொண்டவர்கள் அவசியம் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள், மேலும் உறவுகளுக்கும் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்திடுங்கள். தங்களுக்கும், தங்களை சார்ந்தோருக்கும் ''ஐந்து வீட்டு சுவாமி '' திருவருள் பரி பூரணமாக கிடைக்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

Aathiswamy Temple

குழந்தை வரம் தந்த குலதெய்வத்திற்கு, முடி காணிக்கை கொடுத்து, காது குத்தி கொள்கிறார்கள்

Aathiswamy Temple

நிம்மதி தரும் திருத்தலத்தின்,  ஒரு பகுதியின்  எழில் மிகு தோற்றம்

Sri Periyaswamy

அருள் மிகு பெரியசுவாமியின் சயன கட்டில்,  இந்த இடத்தின் அருகில் பணிவிடை பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் ஏரல் அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடாரால் கட்டி கொடுக்கப்பட்டது.

Sri Periyaswamy Pooja

  எல்லா தெய்வ சன்னதியிலும்   கடவுளுக்கு அடுத்த நிலையில் பூசாரிகளுக்கு மரியாதையை கொடுக்கபடுகிறது, பக்தர்கள் தெய்வ   திரு உருவை நெருங்க முடியாது, ஆனால் இங்கு கடவுளை தொட்டு வணங்கலாம்,  வணங்கும் போது பூசாரிகளும் (அண்ணாவி) பக்தர்களுடன் நின்று பூஜை செய்கிறார்கள்  இது கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது,  இத் திருக் கோவிலின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே மிகவும் உன்னதமான இருந்து  உள்ளது , இந்தக்கோவில் தெய்வங்களை  நம் குல தெய்வமாக அடைய பெற்றதற்கு நாம் பெருமை கொள்ளுவோம்,
                                        ஹரி ஓம் ராமானுஜாய 
                                        ஹரி ஓம் ராமானுஜாய
                                        ஹரி ஓம் ராமானுஜாய...................